Wednesday, 3 February 2016

Vidial Social Welfare Trust

We are REG : 4297 / 2008 VIDIAL SOCIAL WELFARE TRUST on behalf of the welfare of children, the environment, youth development, women's empowerment, health camps, road safety awareness, body donate  awareness, eye donate awareness, blood donation camps, handicapped development. Please immediately communicated directly to blood collection. Subframe is our main tasks Tirupur without a profit motive might have been serving the community in the surrounding areas.If someone is willing to help or contact a member, WE WANT DONATION

Our address VIDIAL SOCIAL WELFARE TRUST 19 / 37, N.R.K PURAM, 2ND STREET, TIRUPPUR - 641607. TAMILANDU, INDIA. E-MAIL ID vidiaswtrust@gmail.com  
OUR BANK : YES BANK  A/C NO : 048488700000033- IFSC CODE : ESB0000484,   
 ICICI BANK A/C NO : 615405059949 IFSC CODE : ICIC0006154



18.12.2025 அன்று விடியல் சமூக நல அறக்கட்டளை சார்பாக கொங்கு மெயின் ரோடு அப்பச்சி நகர் தனலட்சுமி தியேட்டர் அருகில் சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தம் பரிசோதனை முகாம்  பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக  பரிசோதனை செய்யப்பட்டது இதில் உணவு கட்டுப்பாடு, நல்ல உணவுகளை தேர்வுசெய்து. உணவு  உட்கொள்ளவேண்டும் மற்றும் உடற்பயிற்சி தியானம் மூலமாக  நோய்களை கட்டுப்படுத்தும். என்று எடுத்துரைக்கப்பட்டது. 80 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பரிசோதனை செய்துகொண்டனர்  








திருப்பூர் 17.12.2023 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியிலிந்து மதியம் 1.30 மணிவரை   விடியல் சமூக நல அறக்கட்டளை காந்தி நகர் ரோட்டரி கிளப் ரேவதி மருத்துவமனை லோட்டஸ் கண் மருத்துவமனை இணைந்து பிச்சம்பாளையம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் பொதுமருத்தும், கண் அறுவைசிகிச்சை, பல் பரிசோதனை இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு இலவச பரிசோதனை  முகாம்  நடத்தப்பட்டது. சுமார் 125 பேர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.  இதில் 8 பேருக்கு கண்ணில்  வெண்திரை பாதிக்கப்பட்ட முதியவர்களுக்கு இலவச அறுவை கிசிச்சைக்கு பரிந்துரைத்தனர் இவர்கள் அனைவருக்கு உணவு, தங்கும் வசதி மற்றும் போக்குவரத்து மருந்து மாத்திரை அனைத்தயும் இலவசமாக வழங்கப்படுகிறது. பொது மருதூதுவ முகாமில் பங்கு கொண்ட பொதுமக்களுக்கு  தலைவலி சத்து காய்ச்சல் மாத்திரை இலவசமாக வழங்கப்பட்டது.





11.12.2023 திங்கள் கிழமையன்று  விடியல் சமூக நல  அறக்கட்டளை சார்பாக மிக்ஜாம் புயலால் வெள்ளத்தால் சென்னை  தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 4மண்டலம்:55 வார்டு மழையால்பாதிக்கப்பட் அன்னைஅஞ்சுகம் நகர்   மிகவும்  பாதிக்கப்பட்ட  ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பிஸ்கட், தண்ணீர் பாட்டில் , பேஸ்ட், மேகி, நேப்கின், பெட்சிட்,  3 நாட்களுக்கு தேவை  பொருட்கள் சுமார் 150 பேருக்கு வழங்கப்பட்டது.  இந்த வெள்ள நிவாரணத்திற்கு உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கு எனது இருகரம்  கூப்பி நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். வாழ்க வளமுடன்.




07.12.2023 அன்று காலை 12.00 மணியிலிந்து 1.00 மதியம் வரை விடியல் சமூக நல அறக்கட்டளை மற்றும் அகல் மனநலம் போதை மீட்பு மருத்துவமனை இணைந்து திருப்பூர் பாண்டியன் நகர்   உயர்  நிலைப்பள்ளி மாணவர்களுக்கு போதை  தடுப்பு விழிப்புணர்வு மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு  மனநலத்தை எப்படி மேம்படுத்துவது  மற்றும் மனநலம் சார்ந்த குறைபாட்டினை கண்டறிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மனநல ஆலோசகர் மருத்துவர் திரு.பிரகதீஸ்வரன் கலந்துகொண்டு சுமார் 9 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு மற்றும் வகுப்பு  மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினார் சுமார் 100 மாணவர்கள் கலந்துகொண்டு  பயனடைந்தனர். போதையினால் ஏற்படும் தீமைகள் மற்றும் உடல்  நலம் மனநலம்  . சுய பரிசோதனை செய்துகொள்ளவும்  மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது





04.12.2023 அன்று காலை 11.30 மணியிலிந்து 12.30 மதியம் வரை விடியல் சமூக நல அறக்கட்டளை மற்றும் அகல் மனநலம் போதை மீட்பு மருத்துவமனை இணைந்து திருப்பூர் பிச்சம்பாளையம்  உயர்  நிலைப்பள்ளி மாணவர்களுக்கு போதை  தடுப்பு விழிப்புணர்வு மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு  மனநலத்தை எப்படி மேம்படுத்துவது  மற்றும் மனநலம் சார்ந்த குறைபாட்டினை கண்டறிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மனநல ஆலோசகர் மருத்துவர் திரு.பிரகதீஸ்வரன் கலந்துகொண்டு சுமார் 9 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு மற்றும் 12 வகுப்பு  மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினார் சுமார் 130 மாணவர்கள் கலந்துகொண்டு  பயனடைந்தனர். கூலிப் என்ற போதை மிட்டாய் . சுலபமாக அணைத்து மாணவர்கள் மத்தியிலும் கிடைத்துக்கொண்டு இருக்கிறது. மிகவும் மாணவர்கள் மத்தியில் பரவி வருகிறது. இதை தடுக்கும் வண்ணமே இந்த விழிப்புணர்வு தொடர்ந்து நடத்திக்கொண்டு இருக்கிறோம்.





திருப்பூர் 30.11.2023 அன்று புதுராமகிருஷ்ணா புரம் மாநகராட்சி உயர்நிலை பள்ளியில்  விடியல் சமூக நல அறக்கட்டளை கோவை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் சாய் சக்தி சேவா சமிதி இணைந்து கண் இலவச பரிசோதனை  முகாம் நடத்தப்பட்டது.  இதில் சுமார் 1200 மாணவிகள் கலந்து கொண்டனர். கண் மிகவும் பாதிப்பட்ட  மாணவிகளுக்கு அரவிந் கண் மருத்துவமனை மேல் பரிசோதனைக்கு பரிந்துரைத்தனைர் தூர பார்வை கிட்ட பார்வை உள்ள மாணவிகளுக்கு கண்கண்ணாடி இலவசமாக வழங்கப்படும் என்று உறுதி ஏற்று கண்ணாடி அளவு எடுத்து 10 நாட்கள் கழித்து சுமார் 85 மாணவர்களுக்கு கண்ணாடி இலவசமாக வழங்கப்படுகிறது.





29.11.2023 அன்று காலை 11 மணியிலிந்து 12.30 மதியம் வரை விடியல் சமூக நல அறக்கட்டளை மற்றும் அகல் மனநலம் போதை மீட்பு மருத்துவமனை இணைந்து திருப்பூர் குமரனந்தபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு போதை  தடுப்பு விழிப்புணர்வு மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு  மனநலத்தை எப்படி மேம்படுத்துவது  மற்றும் மனநலம் சார்ந்த குறைபாட்டினை கண்டறிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மனநல ஆலோசகர் மருத்துவர் திரு.பிரகதீஸ்வரன் கலந்துகொண்டு சுமார் 9 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினார் சுமார் 120 மாணவர்கள் கலந்துகொண்டு  பயனடைந்தனர்.




திருப்பூர் 08.11.2023 அன்று அரசு உயர்நிலைப்பள்ளி பொம்மநாயக்கன்பாளையம், பள்ளியில் படிக்கும் மாணவ மற்றும் மாணவியருக்கு இலவச கண்பரிசோதனை செய்யப்பட்டது    விடியல் சமூக நல அறக்கட்டளை மற்றும் கோவை அரவிந்த் கண் மருத்துவமனை  இணைந்து சுமார் 380 மாணவ மாணவியருக்கு கண் பரிசோதனை செய்துயப்பட்டது. இதில் 20 மாணவ மாணவியர்கள் கண்கள் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் மேல் பரிசோதனைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர். மேலும் 15 பேருக்கு கிட்ட பார்வை தூரப்பார்வை குறைபாடு உள்ள மாணவர்களுக்கு இலவசமாக கண்ணாடி வழங்க அளவு எடுக்கப்பட்டு கண்ணாடி வழங்கப்படும். என்பதை தலைமையாசிரியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.





18.10.2023 அன்று விடியல் சமூக நல அறக்கட்டளை அரவிந்த் கருமருத்துவமனை மற்றும் சாய் சக்தி சேவா சமிதி இணைந்து கண்மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. 







திருப்பூர் தேதி : 11.10.2023  விடியல் சமூக நல அறக்கட்டளை,  ஸ்ரீ  சத்ய சாய் சேவா அமைப்பு மற்றும் கோவை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து திருப்பூர் கணக்கமபாளையம் அரசு மேல்நிலை பள்ளியில் படிக்கும் மாணவ,  மாணவரியருக்கு மற்றும் பள்ளி ஆசிரியர்களுக்கு கண் பரிசோதனை நடத்தப்பட்டது இதில் 1347 பேர் மாணவ மற்றும் மாணவியர் கலந்து கொண்டு கண்களை பரிசோதனை செய்து கொண்டனர்  கிட்டப்பார்வை, தூரப்பார்வை 62 பேருக்கு மாணவ மாணவியருக்கு கண் கண்ணாடி அளவு எடுத்து இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் அதிக கண் பாதிக்கப்பட்ட மாணவ மாணவியருக்கு திருப்பூர் அரவிந் கண் மருத்துவமனைக்கு இலவச பரிசோதனை மற்றும் அனைத்து  சிகிச்சைக்கும்   மேல் பரிந்துரை செய்யப்பட்டனர். இம் முகாமினை தலைமையாசிரியர் திரு. பிச்சாண்டி துவக்கிவைத்தார்.








தேதி 02.10.2023 அன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு விடியல் சமூக நல அறக்கட்டளை, சாய் சக்தி பல் மருத்துவமனை, ஆதார் மருத்துவமனை மற்றும்  திருப்பூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், திருப்பூர் அரவிந் கண் மருத்துவமனை  இணைந்து காலை 9.00 மணிமுதல் மதியம் 3.00 மணிவரை  சாய் சக்தி பல் மருத்துவமனை வளாகத்தில் மாபெரும் இலவச Iமருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இதில் பல் சம்பந்தமாக சுமார் 70 பேருக்கு பல் சிகிச்சை (சொத்தை பல், பல் வலி, பல் பிடுங்குதல் ஓட்டை பல் அடைத்தல், பல்லில் சதை வளர்ச்சி அறுவை சிகிச்சை செய்தல் மற்றும் மருந்து மாத்திரை மௌத் வாஷ், பற்பசை (டூத் பேஸ்ட் ) அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டது, மற்றும் ஆதார் மருத்துவமனை சார்பாக பொது மருத்துவத்தில் அனைத்து விதமான நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு அறுவை சிகிச்சைக்கு தேர்வது செயப்பட்டவர்கள் முதலமைச்சரின்  மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப்படுகிறது.  மேலும் இரத்த அழுத்தம் பரிசோதனை  , சர்க்கரை அளவு பரிசோதனை, இதய  பரிசோதனை மற்றும் மருந்து, மாத்திரை, அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டது. பொதுமக்கள்  சுமார் 110 பேர் பயனடைந்தனர்  அரவிந் கண் மருத்துவமனை சார்பாக கண்பரிசோதனை  பொதுமக்கள் 90 பேர் கலந்து கொண்டு கண்களை பரிசோதனை செய்துகொண்டனர். இதில் 20 பேருக்கு சர்க்கரை அளவு அதிகமாக இருந்த காரணத்தால் சர்க்கரை கட்டுக்குள் கொண்டுவர மாத்திரைகள் வழங்கப்பட்டது. மேலும் 5 பேர்  கண் அறுவை சிகிச்சை தேர்வு செய்யப்பட்டு அரவிந் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இவர்களுக்கு கண்ணில் உள்ள வெண்திரை அகற்றி லென்ஸ் பொருத்தி, மருந்து மாத்திரை , உணவு, தங்கும் வசதி, பிறகு ஒரு மாதம் கழித்து கண் பரிசோதனை இலவசமாக பார்க்கப்படும். சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு அன்னை இந்திரா  காங்கிரஸ் பொது தொழிலாளர்கள் சங்க ( TAICU) மாநில தலைவர் கே.துரைசாமி அவர்கள்  மகளிர் வடக்கு காவல் ஆய்வாளர் திருமதி.கவிதா, அவர்கள்  துணை ஆய்வாளர்கள் திருமதி,அய்யம்மா, கோமதி, அனிதா அவர்கள் மற்றும்  காவலர்கள், மற்றும் கண்ணன் கழுகு மாத இதழ் ஆசிரியர், ஆல் மீடியா ஜெர்னலிஸ்ட் யூனியன் மாநில தலைவர் பாரூக், துணைத்தலைவர் நவ்சாத் , தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க மாநில செயலாளர் வெற்றிவேல் முருகன், குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு முகாமை சிறப்பித்தனர்  முகாம் முடிவில் பல் மருத்துவர் ராகவன் நன்றியுரை கூறினார்.








திருப்பூர் 05.09.2023 செவ்வாய்க்கிழமை  ஆசிரியர் தினத்தை முன்னிட்டு விடியல் சமூக நல அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ  சத்ய சாய் சேவா அமைப்பு இணைந்தது திருப்பூர் கணக்கமபாளையம் அரசு மேல்நிலை பள்ளி வளாகம் மற்றும் பள்ளியை சுற்றியுள்ள பகுதிகளில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்த மரக்கன்றுகளை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டு நட்ட மரங்களை வளர்ப்பதாக உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர் மற்றும் ஆசிரியர் தினமான இன்று தலைமையாசிரியர் பிச்சாண்டி மற்றும் ஆசிரியர்கள் மரக்கன்றுகளை நட்டனர். மேலும் மாணவ மாணவியர்கள் மரக்கன்றுகளை நட்டனர்





திருப்பூர் தேதி : 27.08.2023 அன்று விடியல் சமூக நல அறக்கட்டளை சார்பாக மற்றும் ஸ்ரீ சத்ய சாய் சேவா அமைப்பு இணைந்து நெருப்பெரிச்சல் உட்பட்ட   அறிவொளி நகர் பகுதிகளில் மரக்கன்று    சுமார் 50 மரக்கன்றுகள்  நடப்பட்டது. 6 வார்ட்டு மாமன்ற உறுப்பினர்.கோபால்சாமி மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்தார் மற்றும் அப்பகுதி பொதுமக்கள், மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டு மரக்கன்றுகளை ஆர்வமுடன் நட்டு வைத்தனர். மேலும் அப்பகுதி பொதுமக்கள் நட்ட மரக்கன்றுகளை பராமரித்து வளர்ப்பதாக உறுதியளித்தனர். மரக்கன்று நடும் நிகழ்வில் விடியல் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் ஸ்ரீ சத்ய சாய் சேவா அமைப்பு நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மேலும் அப்பகுதியில் 100 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட திட்டமிட்டு உள்ளோம்.




திருப்பூர் 15.08.2023 செவ்வாய்க்கிழமை அன்று அப்பாச்சி நகர்,  மூன்றாம் வீதியில் சாவித்திரி காம்ப்ளக்சில்  அமைந்துள்ள விடியல் சமூக நல அறக்கட்டளை  அலுவலகத்தில்    76 வது  சுதந்திர தினத்தை முன்னிட்டு   விடியல் சமூக நல அறக்கட்டளை மற்றும் துளசி பார்மஸி  இணைந்து  நடத்திய இலவச மருத்துவமுகாம் இதில்  இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு பரிசோதனை பொதுமக்களுக்கு நடத்தப்பட்டது இதில்  துப்புரவு தொழிலார்கள் மற்றும் பொதுமக்கள் என  சுமார் 120 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு  பரிசோதனை செய்துகொண்டு பயனடைந்தனர்.







 

தேதி : 23.07.2023 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியிலிருந்து மதியம் 2.00 மணிவரை சாய் சக்தி பல்   மருத்துவமனை வளாகத்தில் விடியல் சமூக நல அறக்கட்டளை சார்பாக அன்னபிளவு பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது  7 பேர் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் கலந்துகொண்டு அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களுக்கு ஆலோசனை மற்றும் 3 குழந்தைகள் அறுவை சிக்கிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு முற்றிலும் இலவசமாக கொச்சியில் உள்ள  கிண்டர் மருத்துவனைக்கு  செல்கிறார்கள் அவர்களுடன் உடன் செல்பவர்களுக்கும் 6 பேர் விதம்   அவர்களுக்கு 10 நாட்களுக்கு  மருத்துவமனையில் தங்கும் இடம் போக்குவரத்து செலவு, உணவு அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்ட 2 குழந்தைகள் 1 பெரியவர் என  மூன்றுபேருக்கும் இலவசமாக அறுவை சிகிச்சை,மருந்து, உணவு, மருத்துவமனையில் தங்கவும்  ஏற்பாடு செய்துகொடுக்கப்படுகிறது.இவர்கள் அனைவரும் வருகின்ற 28.07.2023 அன்று இரவு கொச்சி கிண்டர் மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் இதற்கு உதவிய திரு.ராகவன் ( மருத்துவர்) சாய் சக்தி பல்மருத்துவமனை, திரு.கண்ணன், யுவராஜ் (கருணை மனிதன்) சிட்டி ஆப்டிகல் திரு.தங்கராஜ் அமன் பாய் திரு.கார்த்திகேயன் மற்றும் கிண்டர் மருத்துவமனை (கொச்சி ) அனைவருக்கும் விடியல் சமூக நல அறக்கட்டளை சார்பாக  மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.





திருப்பூர் 28.05.2023 அன்று காலை 9.30 மணியளவிலிருந்து மதியம் 2.00 மணிவரை  சக்தி பல் மருத்துவமனை வளாகத்தில்  விடியல் சமூக நல அறக்கட்டளை சாய் சக்தி பல் மருத்துவமனை ரேவதி மருத்துவமனை, தி ஐ பவுண்டேஷன் இணைந்து மாபெரும் இலவச பல் பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை முகாம், பொதுமருத்துவமுகாம், இலவச கண் பரிசோதனை மற்றும் கண் அறுவை சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது. இதில்  பல் சம்பந்தப்பட்ட மருத்துவத்தில்  60 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர் இதில் 5 பேருக்கு இலவசமாக முழுவதும் சொத்தையான  பற்கள் அகற்றப்பட்டது. 30 க்கம் மேற்பட்டோருக்கு பாதி நிலையில் பாதிப்படைந்த பல்லை சரிசெய்து அடைக்கப்பட்டது, மற்றும் அனைவருக்கும் பல் சம்பந்த நோய்களுக்கு மௌத் வாஷ் மாத்திரை இலவசமாக வாங்கப்பட்டது. சாய் சக்தி பல் மருத்துவமனை  மருத்துவர் ராகவன்  பொதுமக்களுக்கு பல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் இலவச பொதுமருத்துவ முகாமில் இரத்த அழுத்தம்,  சர்க்கரை பரிசோதனை 70 பேர் மற்றும்  இருதய பரிசோதனை இசிஜி, எக்கோ 10 பேர் விதம் என பொதுமக்கள் பயனடைந்தனர் மேலும் கண் சம்பந்தப்பட்ட இலவச பரிசோதனையில் 60 பேர் பயனடைந்தனர்  கண் வெண் திரை  அகற்றவும்  அறுவை சிகிச்சைக்கு 8 பேர் தேர்வு செய்து மேல் சிகிச்சைக்கு இலவசமாக பரிந்துரை செய்யப்பட்டனர். 






12.02.2023 ஞாயிற்றுக்கிழமையன்று அன்று விடியல் சமூக நல அறக்கட்டளை கைகொடுப்போம் அறக்கட்டளை, ஸ்ரீ காமாக்க்ஷி கருணை இல்ல அறக்கட்டளை  மற்றும் ரேவதி மருத்துவமனை, தி ஐ கண் மருத்துவமனை இணைந்து  நடத்திய மாபெரும் இலவச பொதுமருத்துவம் மற்றும் கண் அறுவை சிகிச்சை முகாம்  திருப்பூர் ராக்கியாபாளையம் பிரிவு ஸ்ரீ ஜெய் நகர்  பூங்காவில் இம்முகமானது  நடைபெற்றது. 150 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர். கண் பார்வை பாதிக்கப்பட்டவர்கள் 60 பேர் அவர்களுக்கு கண்கள் பாதுகாப்பு குறித்து மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.  கண் புரை பாதிக்கப்பட்ட 16 பேருக்கு   இலவச மேல் அறுவை சிகிச்சைக்கு  பரிந்துரை செய்யப்பட்டது. மேலும் பொதுமருத்துவம் இரத்த அழுத்த பரிசோதனை 80 பேர்.,  சர்க்கரை அளவு பரிசோதனை 85 பேர் மற்றும் இருதய படச்சுருள் 30 பேர்  பரிசோதனை, இதய துடிப்பு ஒலி 25 பேர் பரிசோதனை. செய்துகொண்டு  பொதுமக்கள் பயன் அடைந்தனர் இம்முகாமை மூன்றாம் மண்டல தலைவர் திரு.சி.கோவிந்தசாமி அவர்கள் துவக்கிவைத்தார். இம்முகாமானது கெ.திருநாவுக்கரசு (விடியல் சமூக நல அறக்கட்டளை நிறுவனர் / நிர்வாக இயக்குனர்),  திரு.பிரபாகரன், திரு சம்பத் (கைகொடுப்போம் அறக்கட்டளை- நிர்வாகிகள் )  ஆகியோர் தலைமையில் நடைபெற்றது..



27.11.2022 அன்று விடியல் சமூக நல அறக்கட்டளை, ஸ்ரீ காமாக்க்ஷி கருணை இல்ல அறைக்கட்டளை மற்றும் திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனை  இணைந்து விளையாட்டு போட்டியின் தொடர்ச்சியாக சிறப்பு இரத்ததான முகாம் நடைபெற்றது.  வடக்கு மகளீர்  காவல் ஆய்வாளர் திருமதி. கவிதா அவர்கள் மற்றும் வடக்கு மகளீர்  காவல் துணை ஆய்வாளர் திருமதி.கனகவள்ளி அவர்கள்  இரத்ததான முகாமை துவக்கிவைத்தனர்  சுமார் 20 யூனிட் பெற்று அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. சிலம்பாட்ட போட்டி நடத்த உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும்  பாதம்பணிந்து நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் இதை படிக்கோபோது என் நன்றி உங்கள் பாதங்களில் வந்து சேர்ந்தித்திருக்கும். கெ.திருநாவுக்கரசு நிறுவனர் / நிர்வாக இயக்குனர். விடியல் சமூக நல அறக்கட்டளை, ஜிகினா சிலம்பாட்ட குழு




இரண்டாம் நாள் தேதி  27.11.2022, அன்று  மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி விடியல் சமூக நல அறக்கட்டளை, ஸ்ரீ காமாக்க்ஷி கருணை இல்ல அறைக்கட்டளை மற்றும் திருப்பூர் சிலம்பாட்ட கழம்  இணைந்து  சின்னச்சாமி அம்மாள் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட  போட்டி  நடைபெற்றது  , விழாவின்  முடிவில் வெற்றிபெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு  பரிசளிப்பு நிகழ்ச்சியில் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு கே.என்.விஜயகுமார் அவர்கள் முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு பெற்ற  வீரர் வீராங்கனைகள்  சுமார் 100 மேற்பட்டவர்களுக்கு சான்றிதழ் மெடல் வழங்கி சிறப்பித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக திரு.ராஜேந்திரன் அவர்கள் 31வது மாமன்ற உறுப்பினர், திரு.எம்.ஹரிஹரசுதன் அவர்கள், திரு.ஆர்.அர்ஜுனன் அவர்கள் 31வது வார்டு வட்டச் செயலாளர்.   சிலம்பாட்ட போட்டி நடத்த உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும்  பாதம்பணிந்து நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் இதை படிக்கோபோது என் நன்றி உங்கள் பாதங்களில் வந்து சேர்ந்தித்திருக்கும். கெ.திருநாவுக்கரசு நிறுவனர் / நிர்வாக இயக்குனர். விடியல் சமூக நல அறக்கட்டளை, ஜிகினா சிலம்பாட்ட குழு






முதல் நாள் தேதி  26.11.2022, அன்று  மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி விடியல் சமூக நல அறக்கட்டளை, ஸ்ரீ காமாக்க்ஷி கருணை இல்ல அறைக்கட்டளை திருப்பூர் சிலம்பாட்ட கழம்  இணைந்து சின்னச்சாமி அம்மாள் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது, விழாவை துவக்கிவைத்த  திரு.மேயர் ந.தினேஷ்குமார் அவர்கள்  , துணைமேயர் திரு. ரா. பாலசுப்பிரமணியன் அவர்கள்  தெற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.க.செல்வராஜ் அவர்கள்  மூவரும் இணைந்து துவக்கி   வைத்தனர், சிறப்பு அழைப்பாளர்களாக  திரு.ஜி. நாச்சிமுத்து அவர்கள் மாநில செயற்குழு உறுப்பினர்,  திரு.தம்பி.கோவிந்தராஜ் அவர்கள் 2 ஆம் மண்டல தலைவர் 32வது வார்டு , திரு.ராஜேந்திரன் அவர்கள் 31வது மாமன்ற உறுப்பினர் ஆகியோர்  கலந்துகொண்டனர்  திருப்பூர் மாவட்டத்திலிந்து சுமார் 800 சிலம்பாட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள்  பங்கேற்றனர். மேலும் பங்குபெற்ற வீரர் , வீராங்கனைகளுக்கு மற்றும் பெற்றோர்களுக்கு இரண்டுநாட்களுக்கு சுமார் 1400 பேருக்கு  உணவு வழங்கப்பட்டது. சிலம்பாட்ட போட்டி நடத்த உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும்  பாதம்பணிந்து நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் இதை படிக்கோபோது என் நன்றி உங்கள் பாதங்களில் வந்து சேர்ந்தித்திருக்கும். கெ.திருநாவுக்கரசு நிறுவனர் / நிர்வாக இயக்குனர். விடியல் சமூக நல அறக்கட்டளை,  ஜிகினா சிலம்பாட்ட குழு




திருப்பூர் தேதி : 08.10.2022 சனிக்கிழமையன்று விடியல் சமூக அறக்கட்டளையின் 15 வருட துவக்கவிழாவை முன்னிட்டு ஸ்ரீ ராகவேந்திரா பில்டர்ஸ் இணைந்து திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனை,  ரேவதி மருத்துவமனை, தி ஐ பவுண்டஷன் மருத்துவ குழுவினரோடு  மாபெரும் இலவச பொதுமருத்துவ முகாம், கண் அறுவை சிகிச்சை முகாம் மேலும் அன்னதானம், சிறப்பு இரத்ததான முகாம் நடத்தப்பட்டது. இடம் :  தமிழ்நாடு தியேட்டர் எதிர்புரம் ஆஞ்சநேயர் கோவில் அருகில், இந்திரா நகர், பல்லடம் ரோடு. முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர். இதில் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரத்த தான முகாமில் 15 பேர் இரத்ததானம் செய்தனர். மேலும் பொது மருத்துவம்,  கண் சிகிச்சை பங்குகொண்டவர்கள். 175 பேர் என பொதுமக்கள் பயனடைந்தனர். இரத்ததான முகாம், பொதுமருத்துவம், கண்சிகிச்சை முகாம்களை  திருப்பூர் மாநகராட்சி வணக்கத்திற்குரிய மேயர் ந.தினேஷ்குமார் மற்றும்  வணக்கத்திற்குரிய துணை  மேயர்  எம்.கே.எம். பாலசுப்ரமணியம் இருவரும் சேர்ந்து முகாமை துவக்கிவைத்தனர்.  53வது மாமன்ற உறுப்பினர் திருமதி. மணிமேகலை ரவி பொதுமக்களுக்கு அன்னதானத்தை துவக்கி வைத்தார். மேயர், துணை மேயர் இருவரையும் வரவேற்கும் வண்ணம் ஜிகினா சிலம்பாட்ட சிறுவர், சிறுமியர் சிலம்பாட்டதோடு வரவேற்கப்பட்டது.  இம்முகாமில் முத்தாய்ப்பாய் 15ந்து ஆண்டுகாலம்  அறக்கட்டளை ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் அறக்கட்டளை சார்பாக பாராட்டி சான்றிதழ் வழங்கி கெளரவ படுத்தப்பட்டது. சிறப்பு விருந்தினராக பாலா எலும்பு முறிவு மருத்துவர். பாலசுப்பிரமணியன் கலந்துகொண்டார். இம் முகாமானது   விடியல் சமூக நல அறக்கட்டளை நிறுவனர்/நிர்வாக இயக்குனர் கெ.திருநாவுக்கரசு மற்றும் ஸ்ரீ ராகவேந்திரா பில்டர் உரிமையாளர் திரு.வெற்றிவேல் முருகன் ஆகியோர் தலைமையில் நடத்தப்பட்டது. முகாம் முடிவில் விடியல் சமூக நல அறக்கட்டளை நிறுவனர்/நிர்வாக இயக்குனர் கெ.திருநாவுக்கரசு நன்றியுரை கூறினார்.



தேதி : 02.10.2022 எம்.எஸ்.நகர், முருகானந்த புரம், ஸ்டெல்லா மேரிஸ் பள்ளி வளாகத்தில் மருத்துவமுகாம் நடைபெற்றபோது


25.09.2022 திருநீலகண்டபுரம்பஸ் ஸ்டாப்,   டவர் லைன் மருத்துவமுகாம் 


திருப்பூர் 18.09.2022 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.00. முதல் மதியம் 1.30 மணியளவில் நடைபெற்ற. சிவசர்மிளா குழந்தைகள் , முதியோர் காப்பகம்  மற்றும் ரேவதி மெடிக்கல் சென்டர், ஸ்ரீ காமாக்க்ஷி கருணை இல்ல அறக்கட்டளை துவாரகாமாயி பவுண்டேஷன் விடியல் சமூக நல அறக்கட்டளை லோட்டஸ் கண்மருத்துவமனை இணைந்து  பொதுமக்களுக்கு நடைபெற்ற இலவச பொதுமருத்துவ முகாம் மற்றும் இலவச கண்  அறுவை சிகிச்சை முகாமானது சிவசர்மிளா அறக்கட்டளை வளாகத்தில்  நடைபெற்றது 100 க்கும் மேற்பட்ட காப்பகத்தில் உள்ள முதியோர்கள் மற்றும் சிறுவர் சிறுமியர் மேலும் பொதுமக்கள் கலந்துகொண்டு பயன் அடைந்தனர் காப்பகத்தில் உள்ள ஆதரவுற்ற முதியோர்களுக்கு 5 பேருக்கு இலவச கண் புரை அகற்றும்  உயர்தர கண் அறுவை சிகிச்சை, போக்குவரத்து வசதி, உணவு, தங்கும் இடம் மருந்து  வழங்கப்படுகிறது. மேலும் பொதுமருத்துவ முகாமில் இரத்த அழுத்தம், இரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை நடத்தப்பட்டது. இருதய நோய் உள்ளவர்களுக்கு  இலவச இதய பரிசோதனை நடத்தப்பட்டது. இம்முகாமை துவக்கி வைத்த     பழங்கரை ஊராட்சி மன்ற தலைவர் எஸ் கே செந்தில்குமார், துணைத் தலைவர் மிலிட்டரி நடராஜ், அண்ணா கூட்டுறவு வீடு கட்டும் சங்கம் லிமிடெட்  மற்றும் சிவ சர்மிளா அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர்மான டாக்டர் ஏ எஸ் கண்ணன், அண்ணா கூட்டுறவு வீடு கட்டும் சங்கம் லிமிடெட் செயலாளர் திரு ராதாகிருஷ்ணன்,சிவ சர்மிளா அறக்கட்டளையின் துணைத் தலைவர் க.சிலம்பரசன் இந்த முகாமை சிறப்பித்தனர். மற்றும் ரேவதி மருத்துவமனை சார்பாக திரு.சதீஷ் மற்றும் லோட்டஸ் கண் மருத்துவமனை சார்பாக திரு.ராஜா ஆகியோர் பங்குபெற்றனர்.



திருப்பூர் தேதி : 14.08.2022 ஞாற்றுக்கிழமை அன்று விடியல் சமூக நல அறக்கட்டளை, ஸ்ரீ செங்குந்தர் அருள்மிகு ஸ்ரீ கோட்டையண்ணன் சுவாமி ஸ்ரீ பச்சியம்மாள் சுவாமி குலதெய்வ அறக்கட்டளை ஸ்ரீ காமாக்க்ஷி கருணை இல்ல அறக்கட்டளை துவராகாமயி பவுண்டேஷன், ரேவதி மெடிக்கல் சென்டர், மற்றும் தி ஐ பவுண்டேஷன் இணைந்து 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஸ்ரீ செங்குந்தர் அருள்மிகு ஸ்ரீ கோட்டையண்ணன் சுவாமி ஸ்ரீ பச்சியம்மாள் சுவாமி குலதெய்வ அறக்கட்டளை மண்டப வளாகத்தில் 75 வது  சுதந்திர தின சிறப்பு இரத்ததான முகாம்  பொதுமருத்துவம் மற்றும் கண் அறுவை சிகிச்சை முகாம் காலை 9.00 மணியிலிந்து  மதியம் 1.30 வரை நடைபெற்றது இதில் 125 க்கும் மேற்பட்ட அப்பகுதி பொதுமக்கள் கலந்துகொண்டு பயன் அடைந்தனர். மேலும் இ.சி.ஜி. பரிசோதனை 15 பேருக்குக, இரத்த அழுத்த பரிசோதனை, இரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை 70 பேருக்கும்  மேலும் கால்  பாத பயோ மெட்ரிக் 30 பேருக்கும், இரத்ததான கொடுத்த நபர்கள் 15 பேர், கண் பரிசோதனை 70 பேர் கண் குறைபாடு கண்டறியப்பட்ட நபர்கள் 35 பேரும்  மற்றும் கண் அறுவை சிகிச்சை பரிந்துரை செய்தவர்கள் 15 பேர் கண் புரை அறுவை சிகிச்சை தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும். என்று தெரிவிக்கப்பட்டது. இம்முகாமை மொரட்டுப்பாளைம் ஊராட்சி மன்ற தலைவர் திரு பிரபு துவக்கிவைத்தார்,  தலைவர் திரு கணேசன் ஸ்ரீ பச்சியம்மாள் சுவாமி குலதெய்வ அறக்கட்டளை அவர்கள் இம்முகாமை தலைமையேற்றார். மற்றும்   ஸ்ரீ பச்சியம்மாள் சுவாமி குலதெய்வ அறக்கட்டளை நிர்வாகிகள், உறுப்பினர்கள்  கலந்துகொண்டனர், விடியல் சமூக நல அறக்கட்டளை சார்பாக திரு.அசோகன், திரு. சாய் சரவணன், திரு.குணா (செல்வி சாரீஸ்) திரு.அரவிந்த், திரு.நாகராஜ்ஆகியோர் முகாமை சிறப்பித்தனர். நன்றியுரை திரு. கங்காதரன் திருநாவுக்கரசு வழங்கினார் விடியல் சமூக நல அறக்கட்டளை நிறுவனர் / நிர்வாக இயக்குனர்.  மேலும் இம்முகாம் சிறப்பாக ஒத்துழைப்பு நல்கிய திரு. சதீஷ் (ரேவதி மருத்துவமனை ), திரு. அஸ்வின் ( தி ஐ பவுண்டஷன் ) நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.


தேதி : 31.07.2022 அன்று விடியல் சமூக நல அறக்கட்டளை, ரேவதி மெடிக்கல் சென்டர், ஸ்ரீ காமாக்க்ஷி கருணை இல்ல அறக்கட்டளை துவாரகாமாயி பவுண்டேஷன், இந்தியன் பிரஸ் கிளப்,  லோட்டஸ் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச பொது மற்றும் கண் அறுவை சிகிச்சை முகாம் திருப்பூர் வாவிபாளையம் ஸ்ரீ காமாட்சி கோவில் கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. அப்பகுதி பொதுமக்கள் கலந்துகொண்டு பயன் அடைந்தனர் இதில் பொதுமருத்துவமுகாமான இரத்த அழுத்த பரிசோதனை, இரத்தத்தில் சர்க்கரை அளவு  என சுமார்  98 பேர்,   இதய பரிசோதனை ஈ.சி.ஜி. 20 பேர் மற்றும்  கண்பரிசோதனை 85 பேர் இதில் கண் குறைபாடு கண்டறியப்பட்டு தீர்வு வழங்கப்பட்டது. 6 பேர் கண் அறுவை சிகிச்சைக்கு மேல் பரிந்துரை செய்யப்பட்டது. 6 பேருக்கும் கண் வெண்திரை அகற்றும் அறுவை சிகிச்சை முற்றிலுமாக இலவசமாக வழங்கப்படும்.  முகாம் நடத்த உறுதுணையாக இருந்த  திரு.சதிஷ். (ரேவதி மெடிக்கல்) திரு.ராஜா, திரு. பெருமாள்சாமி  (லோட்டஸ் கண்மருத்துவமனை ),   திரு. சேகர், திரு.மயில்சாமி, (திரு.பார்த்த சாரதி. மெஜஸ்டிக்  கான்வென்ட்)  திரு.திருமுருகன், திரு.ஈஸ்வரன். திரு சரவணன். ஆகியோருக்கு பணிவான   நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.





திருப்பூர்  09.07.2022 அன்று விடியல் சமூக நல அறக்கட்டளை,  ஸ்ரீ காமாக் க்ஷி கருணை இல்ல அறக்கட்டளை,  துவராகமாயி பவுண்டேஷன்,  தி.ஐ பவுண்டேஷன் துளசி பார்மசி  இணைந்து  பனியன் தொழிலாள ர் பாதுகாப்பு நலன் கருதி  பிச்சம்பாளையம் புதூர், ஸ்ரீ லட்சுமி நகர் பகுதியில் அமைந்துள்ள ரைஸ் பனியன்  நிறுவனத்தில்  100 க்கும் மேற்பட்ட தொழிலார்களுக்கு இலவச கண் அறுவை சிகிச்சை மற்றும் இலவச இரத்த அழுத்த மேலும் சர்க்கரை அளவு பரிசோதனை நடத்தப்பட்டது. இதில்  75 பேருக்கு கண் பரிசோதனை செய்து. 3 பேருக்கு கண்குறைபாடு கண்டறியப்பட்டு. அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இவர்களுக்கு அறுவை சிகிச்சை முற்றிலும் இலவசமாக அளிக்கப்படுகிறது. 85 பேருக்கு சர்க்கரை அளவு மற்றும் இரத்த அழுத்த பரிசோதனை செய்தவர்களிடம். கண் தான  விழிப்புணர்வு மற்றும்    நோய்வராமல் இருக்க  விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.  காலையில் கட்டாய உடற்பயிற்சி தேவை சரியான நேரத்திற்கு உணவு சாப்பிடவேண்டும் மற்றும் செல்போன் அதிக நேரம் பார்ப்பதை தவிர்க்கவும்   விழிப்புணர்வு  ஏற்படுத்தப்பட்டது.




திருப்பூர் வட்டம் சொக்கனுர் ஊராட்சி, விடியல்  சமூக நல  அறக்கட்டளை, ஸ்ரீ காமாக்ஷி கருணை இல்ல அறக்கட்டளை, துவாரகாமாயி பவுண்டேஷன், இந்தியன் பிரஸ் கிளப்,  ரேவதி மெடிக்கல் சென்டர், லோட்டஸ் கண் மருத்துவமனை சார்பாக இணைந்து நடத்திய இலவச பொது மருத்துவ முகாம் மற்றும் இலவச கண் அறுவை சிகிச்சை முகாம்   03.07.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 முதல் மதியம் 2.00 வரை    இடம் : சொக்கநூர் ஊராட்சி பள்ளி வளாகத்தில்    மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமில் 200 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு 80 பேர் கண் பரிசோதனை செய்யது கொண்டனர் மற்றும் 5 பேருக்கு கண்புரை அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு இலவச கண் அறுவை சிகிச்சை  அளிக்கப்படுகிறது. பொதுமருத்துதவத் தில் சுமார் 125 பேர் கலந்துகொண்டு இரத்த அழுத்தம், சர்க்கரை பரிசோதனைகள் மேலும் இருதய பரிசோதனை மற்றும் இருதய எக்கோ பரிசோதனைகள் முற்றிலும் இலவசமாக செய்யப்பட்டது. இம்முகாமை  திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர்  கே.என்.விஜயகுமார் துவக்கிவைத்தார். முன்னிலை திருப்பூர் சொக்கனுர் ஊராட்சி  மாவட்ட கவுன்சிலர் வேல்குமார் எம்.சாமிநாதன்  திருப்பூர் வட்டம், சொர்ணாம்பாள் பழனிச்சாமி ஒன்றிய பெருந்தலைவர் திருப்பூர் ஒன்றியம், சகுந்தலா  சென்னியப்பன் ஊராட்சி மன்றத் தலைவர் சொக்கனூர் ஊராட்சி, கருப்பசாமி ஊராட்சி மன்றத் துணைத்  தலைவர் சொக்கனூர் ஊராட்சி மற்றும் அனைத்து வார்ட் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். சமூக ஆர்வலர் எஸ்.எம் சென்னியப்பன் நன்றியுரை கூறினார். இம்முகாம் ஏற்பாடு  திருநாவுக்கரசு விடியல் சமூக நல அறக்கட்டளை நிறுவனர் / நிர்வாக இயக்குனர்.




08.03.2022 அன்று  விடியல் சமூக நல அறக்கட்டளை ஸ்ரீ காமா க்க்ஷி கருணை இல்ல அறக்கட்டளை சார்பாக மகளிர் தினத்தை போற்றும் விதமாக  திருப்பூர் முத்துபுதூர் மாநகராட்சி  நடுநிலைப்பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி. அன்புச்செல்வி, ஆசிரியர்கள்  திருமதி. ராஜமாணிக்கம், திருமதி. முத்துலட்சுமி, திருமதி. அமுதா, திருமதி. சுகந்தி, திருமதி.ரமிளாதேவி  மற்றும்   மாணவ , மாணவிகள்  பங்கு கொண்டு மரக்கன்றுகளை ஆர்வமுடன் நட்டனர். மேலும் மாணவ மாணவிகள் மத்தியில் மரங்களின் நன்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்விதமாக ம்ரக்கன்று நடும்விழா நடைபெற்றது. மற்றும் திரு.குணசேகரன் ( செல்வி சாரீஸ்),  திரு. ஆர்.கார்த்திகேயன்,  திரு.வெ.நாகராஜ் எல்.ஐ.சி. இவ்விழா நடைபெற. உறுதுணையாக இருந்தனர்.  வாழ்க வளமுடன் வாழ்த்தும் உங்கள் முன் நான் கெ.திருநாவுக்கரசு நிறுவனர் / நிர்வாக இயக்குனர். விடியல் சமூக நல அறக்கட்டளை.  இதை படித்த உங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.  வணக்கம்.







விடியல் சமூக நல அறக்கட்டளை ஸ்ரீ காமாக்க்ஷி கருணை இல்ல அறக்கட்டளை திருப்பத்தூர் மாவட்ட  டென்னி காய்ட் விளையாட்டு கழகம் மற்றும் இணைந்து திருப்பத்தூர் டென்னி காய்ட் மாவட்ட அளவிலான  விளையாட்டு போட்டி- 2022,  26.02.2022 மற்றும் 27.02.2022 இரண்டு நாட்கள் நாட்கள் வானியாம்பாடி விளையாட்டு திடலில்  நடைபெற்றது. இதில் தலைமை திரு.எஸ்.ஹெச்.எஸ். சாமிநாத அய்யர் அவர்கள் / செல்வி ரேணுகா தேவி அவர்கள், முன்னிலை திரு.ஜேசுதாஸ் அவர்கள் செயலாளர் (திருப்பத்தூர் மாவட்ட  டென்னி காய்ட் விளையாட்டு கழகம்), மேலும்     

ஆண்கள் ஜூனியர் பிரிவில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு (பரிசு கோப்பை)    முதல் பரிசு, இரண்டாம் பரிசு மூன்றாம் பரிசும்ஆண்கள் சப் ஜூனியர் பிரிவில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு (பரிசு கோப்பை)     முதல் பரிசு, இரண்டாம் பரிசு மூன்றாம் பரிசும்,  பெண்கள்  ஜூனியர் பிரிவில் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு (பரிசு கோப்பை)     முதல் பரிசு, இரண்டாம் பரிசு மூன்றாம் பரிசும்  பெண்கள்  சப் ஜூனியர் பிரிவில் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு (பரிசு கோப்பை)     முதல் பரிசு, இரண்டாம் பரிசு மூன்றாம் பரிசும் மற்றும்  ஆண்கள் இரட்டையர் சீனியர் விளையாட்டு பிரிவில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு (பரிசு கோப்பை)   முதல் பரிசு, இரண்டாம் பரிசும்,   பெண்கள்  இரட்டையர் சீனியர் விளையாட்டு பிரிவில் வெற்றி பெற்ற  ராங்கனைகளுக்கு  முதல் பரிசு, இரண்டாம் பரிசும் மேலும் விளையாட்டில் கலந்துகொண்ட வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கு ஊக்கப்படுத்தும் விதமாக மெடல்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இரண்டு நாட்கள் வீரர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.






திருப்பூர் 13.02.2022 அன்று விடியல் சமூக நல அறக்கட்டளை, ஸ்ரீ காமாக்க்ஷி கருனை  இல்ல அறக்கட்டளை, துவாரகாமாயி ஃபவுண்டேஷன், ரேவதி மெடிக்கல் சென்டர் மற்றும்  தி ஐ ஃபவுண்டேஷன் இணைந்து நடத்திய இலவச பொது மருத்துவ முகாம், கண் அறுவை சிகிச்சை முகாம் மற்றும் இரத்ததான முகாம் ஈட்டிவீரம்பாளையம்  கருக்கன் காட்டுப்புதூர் ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடைபெற்றது.  150 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பயன் அடைந்தனர் இதில் அனைவருக்கும் இரத்த அழுத்த பரிசோதனை, சர்க்கரை அளவு பரிசோதனை (எக்கோ, இசிஜி பரிசோதனை செய்யப்பட்டது). 16 பேர் கண் குறைபாடு கண்புரை அறுவை சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டனர் . இவர்களுக்கு முற்றிலும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும்.   ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி, தலைவர்  ராதாமணி சிவசாமி முகாமை துவக்கி வைத்தார் முகாம் முன்னிலை ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி, துணைத்தலைவர் ராஜாமணி கந்தசாமி முன்னிலை வகித்தார்.    ஊராட்சி செயலர் தனபால்,  வார்டு உறுப்பினர் சரவணன் மற்றும் திரு மங்கை ஜெயக்குமார் திரு தங்கம் ஆகியோர் கலந்து கொண்டு. முகாமை சிறப்பித்தனர்.




29.10.2021 விடியல் சமூக நல அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ காமாக்க்ஷி கருணை இல்லம் அறக்கட்டளை  இணைந்து திருப்பூர் கோல்டன் நகர்,  ஏ.எஸ்.பண்டித் நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி அருகில் உள்ள காலி இடங்களில் (வாத்தியார்கள் ) சுந்தர் , சுரேஷ்.   சமூக ஆர்வலர்கள் கண்ணன் மற்றும் தங்கம். கலந்து கொண்டு 30 மரக்கன்றுகளை நட்டனர்.    இந்த மரக்கன்று நடும் நோக்கமானது பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மத்தியில் மரங்களை பாதுகாக்கவும் மரங்களின் நன்மைகளை எடுத்துரைத்தும் மரக்கன்றுகள் நடப்பட்டன. விடியல் சமூக நல அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ காமாக்க்ஷி கருணை  இல்லம் அறக்கட்டளை சார்பாக நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.



திருப்பூர் மாநகராட்சி சார்பாக  தடுப்பூசி போடும் முகாம் நாள் 12.09.2021 அன்று காலை 10.00 மணியிலிந்து மதியம் வரை இடம் :  மெஜஸ்டிக் கான்வென்ட் பள்ளியில் ஓம் சக்தி கோவில் அருகில்  ( முகாம் நடத்தப்பட்டது. மெஜஸ்டிக் கான்வென்ட் பள்ளி விடியல் சமூக நல அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ காமாக்க்ஷி கருணை இல்ல அறக்கட்டளை. (முகாம் ஏற்பாடு) )  பொதுமக்கள் 85 பேருக்கு  கோவிஷீல்ட் தடுப்பூசி போடப்பட்டது. இம் முகாமை சிறப்பான முறையில் நடத்திக்கொடுத்த. அதனை உள்ளங்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்களை தெரிவித்துக்கொள்கிறேன் 





திருப்பூர் 22.08.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இடம் : செல்வி சாரீஸ் முன்பு, கருணாகரபுரி பஸ் ஸ்டாப், கோல்டன் நகர்.  - ஸ்ரீ காமாக்க்ஷி கருணை இல்ல அறக்கட்டளை மற்றும்   விடியல் சமூக நல அறக்கட்டளை  சார்பாக மருத்துவ முகாம் நடத்தபட்டது . இதில்  (இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு) பரிசோதனைகள் மற்றும்   மரக்கன்றுகள்   இலவசமாக வழங்கப்பட்டது .



திருப்பூர் 15.08.2021 அன்று  - 75வது  சுதந்திர தினத்தை முன்னிட்டு  விடியல் சமூக நல அறக்கட்டளை மற்றும் இந்தியன் பிரஸ் கிளப் சார்பாக மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. (இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு) 80 க்கும் மேற்ப்பட்ட பொதுமக்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.  20 க்கும் மேற்பட்டுருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. மரக்கன்றுகளை   நன்றாக பராமரித்து வளர்ப்பவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.



07.05.2021 அன்று விடியல் சமூக நல அறக்கட்டளை  ஸ்ரீ காமாக்க்ஷி கருணை இல்ல அறக்கட்டளை சார்பாக திருப்பூர்  கோல்டன் நகர் பகுதியில் கொரானா தொற்றுநோய் தடுக்கும் விதமாக 200க்கும் மேற்பட்டவர்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முகக்கவசங்கள் வழங்கப்பட்டது. இதற்கு உறுதுணையாக இருந்த திரு.கண்ணன் , திரு.குணா அவர்களுக்கு நன்றி வாழ்க வளமுடன்



06.05.2021 அன்று விடியல் சமூக நல அறக்கட்டளை ஸ்ரீ காமாக்க்ஷி கருணை இல்ல அறக்கட்டளை  சார்பாக  கொரானா தொற்றுநோய் தடுக்கும் விதமாக கபசுர குடிநீர் 200 மேற்பட்ட   பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.


நாள் 14.04.2021திருப்பூர் விடியல் சமூக நல அறக்கட்டளை ஸ்ரீ காமாக்க்ஷி கருணை இல்ல அறக்கட்டளை  இணைந்து திருப்பூர் காலேஜ் ரோடு, ரத்தினபுரி லேவுட்  சாலைகளில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மற்றும் உலக  பூமி தினத்தை  முன்னிட்டு      மரக்கன்றுகள் நட்டு பூமியை பாதுகாத்தல்  குறித்து  விழிப்புணர்வு அந்த பகுதியில் வசிக்கும் இளைஞர்கள் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள்  ஆகியோரிடம்   இணைந்து  நடத்தப்பட்டது.



நாள்  22.09.2020 அன்று விடியல் சமூக நல அறக்கட்டளை ஸ்ரீ காமாக்க்ஷி கருணை இல்லம் அறக்கட்டளை இணைந்து திருமதி அப்ரோஸ் அவர்களுடைய பேரன் செல்வன். ஷாஜகான் அவருக்கு   திருப்பூர் சிக்கன்னா அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு இளநிலை கல்லூரில்  படிக்க  கல்வி உதவித்தொகையாக கல்லூரியில் சேர்க்கைக்காக ரூ.5000 த்தை  பல் மருத்துவர் திரு  மரு.ராகவன் அவர்களால் வழங்கப்பட்டது. (மருத்துவப்  பிரிவு விடியல் சமூக நல அறக்கட்டளை) மேலும் இவர் கல்லூரியில் 3 ஆண்டுகள் படிப்பு முடியும் வரை இவருக்கு படிப்புக்கு உண்டான உதவிகளை செய்வதாக அறக்கட்டளை நிறுவனர் பொறுப்பேற்றார்கள் .  இதற்கு உதவியாக இருந்த திரு.கண்ணன், திரு.சுந்தர் அனைவரும் வாழ்த்தி  வாழ்க வளமுடன்






நாள் 20.09.2020 விடியல் சமூக நல அறக்கட்டளை ஸ்ரீ காமாக்க்ஷி கருணை இல்லம் அறக்கட்டளை இணைந்து அப்பகுதியில்  இரண்டாவது கட்டமாக 50 க்கும்  மேற்பட்ட மரக்கன்றுகள் திருப்பூர் கால்லேஜ் ரோடு ரத்தினபுரி  கார்டன் ரிசர்வ் இடங்களில் நடப்பட்டது. திரு.எஸ்.ஹெச்.எஸ். சாமிநாத அய்யர் தலைமையில் நடைபெற்றது. இதற்கு உதவியாக இருந்த திரு.கார்த்திகேயன் திரு.அகஸ்ட்டியன். திரு.கண்ணன் திரு.ஆனந்த்.மற்றும் அப்பகு தியை சார்ந்த இளைஞர்கள் பெண்கள் கலந்துகொண்டனர். மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பதாக உறுதிமொழி ஏன்றுகொண்டனர். இயற்க்கை அன்னையை நேசிக்கும் இவர்கள் என்றும் வாழ்க வளமுடன் .



விடியல் சமூக நல அறக்கட்டளை  ஸ்ரீ காமாக்க்ஷி கருணை இல்ல அறக்கட்டளை இணைந்து திருப்பூர் கோல்டன் நகர் பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் திரு.தாமோதரன் அவர் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் நட்டு பராமரிப்பதற்காக உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.அறக்கட்டளை அலுவலகத்தில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இதற்கு உதவியாக இருந்த திரு.சரவணன் இருவரையும் வாழ்த்தி வாழ்க வளமுடன். (எனது திருமண நாளில் இந்த பதிவை இடுவதில் மகிழ்ச்சி இயற்க்கை அன்னையை வணங்கி)







திருப்பூர் 15.08.2020 - 74 வது  சுதந்திர தினத்தை முன்னிட்டு விடியல் சமூக நல அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ காமாட்சி கருணை இல்லம் அறக்கட்டளை இணைந்து திருப்பூர் அப்பாச்சி நகர் தனலட்சுமி தியேட்டர் அருகில் பொதுமக்களுக்கு கட்டாய முகக்கவசம் அணிய வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 400 முகக்கவசம் இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் திருப்பூர் காலேஜ் ரோடு, ரத்தினபுரி கார்டன் குடியிருப்பு பகுதி அருகில் உள்ள காலியிடங்களில்  50 மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் ரத்தினபுரி குடியிருப்போர் நலச்சங்கம் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள்  மரக்கன்றுகளை  பராமரித்து நட்டு வளர்ப்பதாக உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதற்கு பேருதவியாக இருந்த  நண்பர்கள் திரு. மயில்சாமி  (ரித்விக் கார்மண்ட்ஸ்), திரு.மங்கை ஜெயக்குமார்   திரு.கண்ணன் திரு.கார்த்திகேயன் திரு.ஆனந்தகுமார் திரு.வரதராஜன் திரு.அகஸ்டின்ராஜ்  மற்றும் அப்பகுதி குடியிருப்போர்.  இவர்கள் இவர் குடும்பத்தார் என்றும் வாழ்க வளமுடன்





திருப்பூர் 06.08.2020 விடியல் சமூக நல அறக்கட்டளை  - ஸ்ரீ காமாக்க்ஷி கருணை இல்ல அறக்கட்டளை இணைந்து திருப்பூர் கணக்கம்பாளையம் பஞ்சாயத்துக்குட்பட்ட  ரிசர்வ்  சைட்டில் 30 மரக்கன்றுகள் நடப்பட்டது . இந்த நற்காரியங்கள்  செய்ய உதவியாக இருந்த திரு. தாழம்பூ ராஜன் (ஆசிரியர் ) திரு. சண்முகசுந்தரம் (கணக்கம்பாளையம் பஞ்சாயத் தலைவர் ), திரு. ஜெயக்குமார்.(அண்ணன்) திரு.சாமிநாதன் திரு.ஜெகநாதன் மற்றும் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வரும், பராமரிப்பதாகவும் உறுதி ஏற்றுக்கொண்ட கணக்கம்பாளையம் ஊர் பொதுமக்கள் இவர்களை மனம் மகிழ பாராட்டி வாழ்க வளமுடன்
https://www.youtube.com/watch?v=1Qg9RlPRUPw&feature=youtu.be




திருப்பூர் 01.07.2020 விடியல் சமூக நல அறக்கட்டளை ஸ்ரீ காமாக்ஷி கருணை இல்லம் அறக்கட்டளை மற்றும் பார்ச்சுன் இந்தியா சாரிடபள் அறக்கட்டளை இணைந்து கொங்கு மெயின் ரோடு தனலட்சுமி தியேட்டர் அருகில் 80 க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவசமாக  சானிடேசர் 100 மில்லி பாட்டில் மற்றும் 400 பேருக்கு முகவசம் பொதுமக்கள்,  பாரத் கேஸ் ஊழியர்கள் மற்றும் துப்புரவு தொழிலார்கள்  அனைவருக்கும் வழங்கப்பட்டது. கைகளை அடிக்கடி சோப்பு, மற்றும் சானிடேசர்  மூலமாக சுத்தம் செய்யவும் கட்டாயம்  முகக்கவசம் அணிந்து வெளியில் செல்லவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஒத்துழைப்பு நல்கிய திரு.ரித்விக் கார்ட்மெண்ட்ஸ் மயில்சாமி, திரு.சிவமுருகன்,திரு.கண்ணன் திரு. ஜெகன் திரு.குணசேகரன்,திரு விவேகானந்தன் (ரூபா மருத்துவமனை )  திரு சரவணன் (ஓர்க்ஸ்ஹாப்)


05.05.2020  விடியல் சமூக நல அறக்கட்டளை சார்பாக திருப்பூர்  கே.ஜி லே அவுட்டில் வசிக்கும்  தீபிகா என்ற ஏழை  பெண்ணிற்கு 40 நாட்களுக்கு  மாத்திரை வழங்கப்பட்டது.



02.05.2020 அன்று விடியல் சமூக நல அறக்கட்டளை   சார்பாக (நரம்பு பாதிப்பால் நடக்கமுடியாமல் தவிக்கும் ஏழை குடும்பமானதிரு. வெங்கடேஷ்  மற்றும் அவர் தாயார் அவர்களிடம் 30 கிலோ  அரிசி வழங்கப்பட்டது. இதற்க்கு உதவியாக இருந்த திரு. மயில்சாமி மற்றும்   திரு.அருண்குமார். அவர்களுக்கு நன்றிவாழ்க வளமுடன்.




26.04.2020 அன்று விடியல் சமூக நல அறக்கட்டளை  சார்பாக பிச்சம்பாளைம் புதூர், ஸ்ரீ லட்சுமி நகர், இந்திரா நகர் மற்றும் கணேஷ் நகர் பகுதியில் அங்கு வசிக்கும்  ஏழை தொழிலாளர்கள் வசிக்கும் பகுதியில் 400 க்கும் மேற்பட்டவர்களுக்கு  முககவசம் வழங்கப்பட்டது. பொதுமக்களுக்கு கொண்டு செல்வதற்கு உதவிய திரு.மயில்சாமி (ரித்விக் கார்மெண்ட்ஸ்) திரு.பாலசுப்ரமணியம் திரு. கவின் கிஷோர் நீங்கள் அனைவரும் அருள் பேராற்றல் கருணையினால் நீண்டஆயுள், நிறை செல்வம், உயர்புகழ், மெய்ங்கானம், ஓங்கி வாழ்க வளமுடன்



23.04.2020  அன்று திருப்பூர்  மேட்டுப்பாளையம் பகுதியில் வசிக்கும் வறுமையில் வசிக்கும் குடும்பத்திற்கு அரிசி மற்றும் காய் கறிகள்  கொடுத்து  சிறு உதவி செய்ய எனக்கு வாய்ப்பு கொடுத்த நண்பர்கள் மற்றும் இறைவனுக்கு நன்றி



15.04.2020 விடியல் சமூக நல அறக்கட்டளை சார்பாக திருப்பூர்பிச்சம்பாளையம் புதூர், ஸ்ரீ நகர் பகுதில் குடியிருக்கும் பொதுமக்கள் மற்றும் வடமாநில கூலி தொழிலார்களுக்கு கொரானா கிருமி தடுக்கும் முயற்சியாக  பொதுமக்களுக்கு   350 க்கும் மேற்பட்ட முக கவசம் இலவசமாக   வழங்கப்பட்டது. இதற்க்கு  உதவியாக இருந்த . ரித்விக் கார்மெண்ட்ஸ் திரு.மயில்சாமி, திரு. ஸ்ரீ நகர் பாலசுப்ரமணியம். திரு. கவின் பாலு, திரு. குணசேகரன், திரு. ஜெகன் (சக்தி மருத்துவமனை)



விடியல் சமூக நல அறக்கட்டளை சார்பாக 13.03.2020 அன்று திருப்பூர் , அறிவொளி நகர் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் மாணவ மாணவியருக்கு இலவச கண் பரிசோதனை மற்றும் சத்துமான  குறைபாட்டினால் கண் பாதுகாப்பு  குறித்து  75 க்கும் மேற்பட்டவருக்கு கண் பார்வை குறைபாடு கண்டறியப்பட்டு    மாணவ மாணவியரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுசுமார் 375  மாணவ மாணவியர் கலந்துகொண்டு பரிசோதனை செய்துகொண்டனர்இதற்கு பெரும் உதவியாக இருந்த திரு.தலைமை ஆசிரியர் திருநாவுக்கரசு அவர்கள் மற்றும்  அறிவொளி நகர்  ஊராட்சி மன்ற தலைவர் அவர்கள் திரு.தங்கராஜ்  நிறுவனர் (சிட்டி கேர்)- அவர்களுக்கு நன்றி இந்த முகாமை பிரகாசன் , கோகிலா திருமண தம்பதியருக்கு அற்பணிக்கிறோம். வாழ்க வளமுடன்.



திருப்பூர் 22.2.2020 அன்று எல்.ஆர்.ஜி.கல்லூரி நாட்டு நல பணித்திட்டத்தின் கீழ்  விடியல் சமுக நல அறக்கட்டளை சிட்டி கேர் மற்றும் ரேவதி மருத்துவமனை இணைந்து  ஈட்டி வீரம்பாளையம் பஞ்சாயத்தில் எஸ்.எஸ். நகர் ஆரம்பப்பள்ளி வளாகத்தில் பொதுமக்கள் மற்றும் மாணவியருக்கு  இலவச மருத்துவ பரிசோதனை கண் பரிசோதனை  மற்றும் பொதுமருத்துவதில் அணைத்து நோய் களுக்கும்  மற்றும் .சி.ஜி பரிசோதனையும் செய்யப்பட்டது. 60 க்கும் மேற்பட்ட. பொதுமக்கள் மற்றும் 50 மாணவியர் கலந்துகொண்டு பரிசோதனை செய்துகொண்டு பயன் அடைந்தனர். மற்றும் மாணவியர்  சிறப்பாக சமூக சேவை செய்தனர். இம்முகாம் நடத்த எனக்கு வாய்ப்பளித்த திரு.நாட்டு நல பணித்திட்டம் இயக்குனர்கள் திருமதி.தேவி, கவுசல்யா தேவி, சுகன்யா. மற்றும் திரு.ஜெகன், திரு.சரவணன், திரு.சுந்தரபாண்டியன் ( திரு.தனபால், சரவணன் ( ஈட்டி வீரம் பாளையம் பஞ்சாயத்து) அத்துணை நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். வாழ்க வளமுடன்.


18.02.2020 அன்று விடியல் சமூக நல அறக்கட்டளை  சார்பாக திருப்பூர் எம்.எஸ் நகர் பகுதியை சேர்ந்த  திரு. ஈஸ்வர மூர்த்தி அவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. திரு ஈஸ்வர மூர்த்தி அவர்கள். ஏற்கனவே மரக்கன்றுகளை  நட்டு பராமரித்து வருபவர்மரக்கன்றுகளை அவருக்கு  வழங்கியது. மகிழ்ச்சியாக உள்ளது.

 

திருப்பூர் 16.02.2020 அன்று விடியல் சமூக நல அறக்கட்டளை சக்தி மருத்துவமனை மற்றும் லோட்டஸ் கண் மருத்துவமனை இணைந்து இலவச காண்பரிசோதனை , இரத்தத்தில் சர்க்கரை அளவு மற்றும் இரத்த அழுத்த பரிசோதனைகள் செய்யப்பட்டது. இம்முகாமானது இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் வளாகத்தில் நடைபெற்றது. இடம் ஊத்துக்குளி ரோடு பாளையக்காடு. இம்முகாமில் பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் 100 க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு பரிசோதனை செய்துகொண்டனர்கண்பரிசோனையில் கண் குறைபாடு கண்டறியப்பட்டு. 3 பேருக்கு இலவச கண்புரை அகற்றுவதற்கு அறுவை சிகிச்சைக்கு தேர்வுசெய்யப்பட்டது. இம்முகாமிற்கு மிக உறுதுணையாக இருந்த  பெட்ரோல் பங்க் உரிமையாளர் மற்றும் ஜெகன் அவர்களுக்கும் எனது பணிவான நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் வாழ்க வளமுடன்.




26.01.2020 குடியரசு தின விழாவை முன்னிட்டு விடியல் சமூக நல அறக்கட்டளை சார்பாக ஆறுமுத்தாம் பாளையம் பள்ளியில் 2018-2019 கல்வியாண்டில் பத்தாம்  வகுப்பில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவ மாணவியருக்கு நினைவுப்பரிசு ,சான்றிதழ் மற்றும்  மரக்கன்றுகள்  வழங்கி  ஊக்கவிக்கப்பட்டது. இந்த அற்புத நிகழ்வை ஏற்படுத்தி கொடுத்த ஆறுமுத்தாம் பாளையம் பள்ளி தலைமை ஆசிரியர் திரு.திருநாவுக்கரசு அவர்களுக்கு நன்றி. மாணவ மற்றும் மாணவியருக்கு  பரிசுகளை வழங்கி ஊக்குவித்த திருஆறுமுத்தாம் பாளையம் ஊராட்சி மன்ற தலைவர்  மற்றும் திரு.முருகன் திரு.தனலட்சுமி  அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.





7,8,-01- 2020 ஆகிய தேதிகளில் விடியல் சமூக நல அறக்கட்டளை  மற்றும்  சிட்டி ஐ கேர்  இணைந்து நடத்திய திருப்பூர், கோல்டன் நகர் பகுதியில் உள்ள  எஸ்.கே.வி ஆங்கில பள்ளியில் படிக்கும்   மாணவர்களின் கண் குறைபாடு கண்டறிந்து. கண்களை எப்படி பாதுகாப்பது என்று விழிப்புணர்வு நிகழ்வாக ஏற்பாடு செய்யப்பட்டது. 600  க்கும் மேற்பட்ட. குழந்தைகள் பரிசோதனை செய்து பயன் அடைந்தனர். இதற்கு உதவிய நண்பர்கள் திரு.தங்கராஜ் திரு.குணா, திரு ஜெகன், திரு.எஸ்.கே.வி  பள்ளி  நிர்வாகம்  தங்கள் அனைவரை நன்றி கூர்ந்து வாழ்த்தி வாழ்க வளமுடன்.



திருப்பூர் கோல்டன் நகர் எஸ்.கே.வி. பள்ளி வளாகத்தில்  05.01.2020 அன்று விடியல் சமூக நல அறக்கட்டளை   சிட்டி ஐ  கேர் ரேவதி மருத்துவமனை இணைந்து இலவச  பொது மருத்துவ முகாம் மற்றும் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.  அறுவை சிகிச்சை தேவை படும் பட்சத்தில் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. இ.சி.ஜி, எக்கோ, இரத்த அழுத்த பரிசோதனை இரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை ஆகியவை இலவசமாக பார்க்கப்பட்டது. 70 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பயன் அடைந்தனர்.  இந்த முகாமிற்கு மிக உறுதுணையாக  நின்று நடத்திய. திரு.குணா (விடியல்) திரு.ரவிக்குமார் அவர்கள்   ( அரவிந்த், நேஹா விஹாஸ்னி, கிஷோர் கண்ணன், யோகேஷ், தரணி.) இந்த குழந்தைகளை சமூக பொறுப்பு ஏற்படுத்தும் நோக்கோடு வழி நடத்திய. திரு.குணா அவர்களுக்கு நன்றி இவர்களை மனமார வாழ்த்தி வாழ்க வளமுடன். நன்றி.


விடியல் சமூக நல அறக்கட்டளையின் 12 ஆம் ஆண்டின் துவக்க விழாவை முன்னிட்டு சிறப்பு மருத்துவமுகாம் நடைபெற்றது. திருப்பூர் 15.12.2019 அன்று விடியல் சமூக நல அறக்கட்டளை  சக்தி மருத்துவமனை மற்றும் சிட்டி கேர் இணைந்து நடத்திய பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் 140 கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்துகொண்டு. கண் பரிசோதனை, இரத்தத்தில் சர்க்கரை அளவு மற்றும் இரத்த அழுத்த  மருத்துவ பரிசோதனை செய்துகொண்டனர்.




08.12.2019 அன்று விடியல் சமூக நல அறக்கட்டளை சார்பாக மெய் ஞான வனமாகும் சிவவாக்கியர் சித்தர் ஆத்ம ஞான பீடத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.  சிவவாக்கியர் சித்தர் ஆத்ம ஞான பீடம் மெய் ஞான வனம் திருப்பூர்.  இயற்க்கை வாழ  உதவிய நண்பர்கள் திரு. கண்ணன், திரு. சித்தர் ஆத்ம ஞான பீடத்தில் நிறுவனர் அவர்களுக்கு நன்றி.


திருப்பூர் 02.12.2019 அன்று மாலை விடியல் சமூக நல அறக்கட்டளை  சார்பாகமாணவன் மொஹம்மத் ஆதில் அப்பாச்சி நகர்அவர்  வசிக்கும்  வீட்டின்  அருகில் 5 ந்து  மரக்கன்றுகளை  நட்டு வளர்ப்பதாக உறுதிமொழி ஏற்று மரக்கன்றுகளை நட்டுள்ளான். பசுமையை  பாதுகாக்கும்  அந்த மாணவனுக்கு  மனமார்ந்த பாராட்டுக்கள் மற்றும் நன்றி.



திருப்பூர்  01.12.2019 அன்று விடியல் சமூக நல அறக்கட்டளை சார்பாக மெய் ஞான வனமாகும் சிவவாக்கியர் சித்தர் ஆத்ம ஞான பீடத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.




திருப்பூர் -  தேதி : 24.11.2019 அன்று விடியல் சமூக நல அறக்கட்டளை ,  சக்தி நர்சிங் ஹோம்  மற்றும் சிட்டி ஐ கேர் சார்பாக  இணைந்து நடத்திய. இலவச  பொது மருத்துவ முகாம். இரத்தத்தில் சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம் பார்க்கப்பட்டது . இம்முகமானது. விடியல் சமூக நல அறக்கட்டளை  அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் நிலவேம்பு கசாயம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இம்முகாமில் 105 பேறுக்கு கண் பரிசோதனை  செய்யப்பட்டது. 65 பேறுக்கு கண் குறைபாடு கண்டறியப்பட்டு. அதற்குண்டான தீர்வு மற்றும் கண்ணாடி அணிய அறிவுறுத்தப்பட்டது. இரத்தத்தில் அளவு மற்றும் இரத்த அழுத்த 150 பேறுக்கு பார்க்கப்பட்டது. இரத்த அழுத்தம் அதிகமாக உள்ளவர்களுக்கு மற்றும் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக உள்ளவர்களுக்கும் அடிப்படை  உடற்பயிற்சி கட்டாயமாக செய்யவேண்டும். என்று ஆலோசனை வழங்கப்பட்டது.  இம்முகாம் நடத்த உதவி செய்த  திரு.கண்ணன்  திரு.திலகவதி. திரு.ஜெகன். திரு ரங்கராஜ் திரு.ஆர் சுந்தரபாண்டியன். திரு.ரவி(சாவித்ரி கட்டிட வளாகம்)  அனைவருக்கும் நன்றி








23.11.2019 அன்று விடியல் சமூக நல அறக்கட்டளை  அலுவலகத்தில்  மரக்கன்றுகள் மகேஷ்குமார் அவர்களிடம் வழங்கப்பட்டு. விடியல் அறக்கட்டளை சார்பாக  சிலம்பகவுண்டன்வலசு,  ஓலப்பாளையம் காங்கயம். பகுதிகளில் நடப்பட்டது.   தாயின் கருவறையில் சுவாசித்த நாம்  பூமியின் கருவைக்குள் இன்னும் உயிர் வாழ  நம் அனைவரையும் சுவாசிக்க வைக்கும்.  மரங்களை பாதுகாத்து வளர்த்துவரும் மகேஷ்குமார் போன்ற  இளைஞர்கள் மற்றும் மரங்களை பாதுகாக்கும் அனைவருக்கும். கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் இதற்க்கு உதவியாக இருந்த கோபால் (காசிவிஸ்வநாதர் கோவில் கோபால் மற்றும் ராதாகிருஷ்ணன் கார்த்திகேயன். அவர்களுக்கு நன்றி.


19.11.2019 கண்  பரிசோதனை , சர்க்கரை அளவு பரிசோதனை ,  இரத்த அழுத்த அளவு பரிசோதனை திருப்பூர் அப்பச்சி நகர், கனரா வங்கி கிளையில் நடைபெற்றது. கனரா வங்கி நிறுவனர் நினைவாக வரும் வாடிக்கையாளர்களுக்கு. நடத்தப்பட்டது. இதை ஏற்பாடு செய்த. ஜெகன் மற்றும் ரங்கராஜ் அவர்களுக்கு நன்றி.



உலக சர்க்கரை நோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு  17.11.2019 அன்று விடியல் சமூக நல அறக்கட்டளை , சக்தி மருத்துவமனை மற்றும் சிட்டி கேர் இணைந்து நடத்திய இலவச பொது மருத்துவ பரிசோதனை  மற்றும் இரத்த அழுத்தம், இரத்தத்தில் சர்க்கரை அளவு மற்றும் கண் பரிசோதனை செய்யப்பட்டது . இதில் 150 க்கும் மேற்பட்ட. பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். உலக சர்க்கரை தினத்தை முன்னிட்டு கலந்துகொண்ட பொதுமக்களிடம்  சர்க்கரை நோய் தடுப்பு விழிப்புணர்வு நடத்தப்பட்டது. sakthi hospital : place


13.11.2019 அன்று விடியல் சமூக நல அறக்கட்டளை , சக்தி நர்சிங் ஹோம் மற்றும் சிட்டி ஐ ஆப்டிகல் இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் , பொது மருத்துவ பரிசோதனை முகாம்  மற்றும் பெண்களுக்கான மருத்துவ பரிசோதனை மற்றும் ரத்தத்தில் சர்க்கரை அளவு இரத்த அழுத்தம், முகாம் திருப்பூர் ஜெய்வாபாய் பெண்கள் மேல் பள்ளியில் நடைபெற்றது. இதில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டு பயனடைந்தார்கள். இதில் பெண்களுக்கான மருத்துவ ஆலோசனை மருத்துவர் திருமதி கவிதா அவர்களால் வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியர்  திருமதி.ஸ்டெல்லா அமலோற்பவ மேரி அவர்கள் தலைமையிலும்.,   ஜெய்வாபாய் நாட்டு நலப்பணித்திட்ட பொறுப்பாளர் திருமதி சாந்தி அவர்கள் முன்னிலையிலும். நடைபெற்றது.



02.10.2019 அன்று அன்றுமாலை காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு யூனியன் பேங்க் ஆப் இந்தியா மற்றும் விடியல் சமூக நல அறக்கட்டளை இனைந்து  கோல்டன் நகர் பள்ளி அருகில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில்  யூனியன் பேங்க் ஆப் இந்தியா புதிய பேருந்து பெருமாநல்லூர் கிளை உதவி மேலாளர் திரு.அஜின் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு சிறப்பித்தார். மற்றும் திரு. கே.கே. ஸ்டீல் உரிமையாளர் திரு.குமார் அவர்கள் கலந்துகொண்டு மேலும் சிறப்பித்தார். மரக்கன்றுகளை. நட்டுவதற்கு உறுதுணையாக இருந்த திரு.கண்ணன் அவர்களுக்கு நன்றி


02.10.2019 அன்று விடியல் சமூக நல அறக்கட்டளை   மற்றும் சக்தி மருத்துவமனை இனைந்து அண்ணல் காந்தியடிகளின் 150 ஜெயந்தி விழாவினை முன்னிட்டு சிறப்பு மருத்துவப்பரிசோதனை முகாம் சின்னச்சாமி அம்மாள்  நகராட்சி ஆண்கள் மேல் நிலை பள்ளி முன்பு நடைபெற்றது. இதில் இரத்த அழுத்தம் , இரத்தத்தில் சக்கரை அளவு இலவசமாக பார்க்கப்பட்டது. 200கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.



29.09.2019 திருப்பூர்  ஜெய்வாபாய் நகராட்சி மாதிரி பெண்கள்  மேல்நிலைப்பள்ளி . விடியல் சமூக நல அறக்கட்டளை. இணைந்து. நாட்டு நலப்பணி திட்டத்தின் கீழ்  திருப்பூர்கருமாரம்பாளையம் பள்ளியில்  பொதுமக்களுக்கு இலவச பொதுமருத்துவம், செவித்திறன் பரிசோதனை, கண் பரிசோதனை மற்றும் இரத்த அழுத்தம் பரிசோதனை, சர்க்கரை அளவு பரிசோதனை நடத்தப்பட்டது, இம்முகாமில் 150 மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பயன் அடைந்தார்கள். இதில் நாட்டு நல பணித்திட்ட மாணவிகள் பொது மக்களுக்கு சமூக சேவை செய்வது பற்றி  தெரிந்துகொண்டனர்.


28.09.2019 திருப்பூர்  ஜெய்வாபாய் நகராட்சி மாதிரி பெண்கள்  மேல்நிலைப்பள்ளி . விடியல் சமூக நல அறக்கட்டளை. இணைந்து. நாட்டுலப்பணித்திட்டம் நடத்தப்பட்டது.  இதில் தீயினால் ஏற்படும் விபத்துக்குறித்து நாட்டு நலப்பணித்திட்ட  மாணவர்கள் மத்தியில் தீ விபத்து தடுப்பு செயல்விளக்க விழிப்புணர்வு நடத்தப்பட்டது. நாட்டு நல பணித்திட்ட பொறுப்பாளர்  திருமதி சாந்தி முன்னிலையில் நடத்தப்பட்டது. மற்றும் செயல் விளக்க திரு.வி.கெளதம் ஹீல் சேப் சொல்யூஷன்  செயல் விளக்கம் அவர்களால் கொடுக்கப்பட்டது. மற்றும்  விடியல் உறுப்பினர் கார்த்தி   மற்றும் பலர்  கலந்துகொண்டனர்.





27.09.2019 திருப்பூர்  ஜெய்வாபாய் நகராட்சி மாதிரி பெண்கள்  மேல்நிலைப்பள்ளி . விடியல் சமூக நல அறக்கட்டளை. இணைந்து. நாட்டுலப்பணித்திட்டம் நடத்தப்பட்டது.  இதில் சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு முகப்பு விளக்கு  ஸ்டிக்கர்  மற்றும் தலைக்கவசம் அணிவதின் அவசியத்தை பற்றி கருமாரம்பாளையம் பள்ளி அருகில் பிரதான சாலையில் வாசகங்கள் ஏந்தியும் கோஷங்கள் இட்டும் 200 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு  விழிப்புணர்வு. ஏற்பத்தப்பட்டது. ( 30க்கும் மேற்பட்ட நாட்டு நல பணித்திட்ட மாணவிகள் மற்றும் நாட்டு நல பணித்திட்ட பொறுப்பாளர்  திருமதி சாந்தி முன்னிலையில் நடத்தப்பட்டது.) வாழ்கை -2  சீனிவாசன் மற்றும் தங்கவேலு விடியல் உறுப்பினர் சாமிநாதன் மற்றும் பலர்  கலந்துகொண்டனர்.



15.08.2019 அன்று விடியல் சமூக நல அறக்கட்டளை சார்பில் 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருப்பூர் பாப்பநாயக்கன் பாளையம் அரசு துவக்கப்பள்ளியில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இதில் கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ மற்றும் மாணவியரை ஊக்கப்படுத்தும் விதமாக நினைவு பரிசு (ஷீல்டு) வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி நடத்துவதற்கு உதவிய  திரு. தெக்கலூர் கதிரேசன் (வானவில் பேன்சி),  திரு.கண்ணன்  இவர்களுக்கு விடியல் சமூக நல அறக்கட்டளை சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.


14.08.2019 அன்று விடியல் சமூக நல அறக்கட்டளை சார்பாக நீலகிரி , கூடலூர் மாவட்டம் , தொரப்பள்ளியில்  மழையால் பாதிக்கப்பட்ட பழங்குடி இன 30  குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் முக்கிய பங்கு வகித்த திரு.குணசேகரன் (விடியல்), திரு. வேலுமுருகன் (கலை பிரின்டிங் பிரஸ்), திரு.ரமேஷ், திரு. இளங்கோ  (முன்னாள் ராணுவ படை வீரர்) திரு. கண்ணன்  (விடியல்), திரு. ராஜு  திரு.செம்பருத்தி ஆசிரியர் விஸ்வாஸ், வனத்துறை அதிகாரி திரு.காந்தன்  மற்றும் நவீன்-மணிகண்டன் இந்த குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் சென்றடைய செய்த உங்கள் அனைவருக்கும். விடியல் சமூக நல அறக்கட்டளை சார்பாக சிரம் தாழ்ந்த நன்றி 

08.08.2019 அன்று வாழ்க்கை -2  மற்றும் விடியல் சமூக நல அறக்கட்டளை சார்பாக  அறிவொளி நகர், ஆறுமுத்தாம்பாளையம் அரசு உயர்நிலைபள்ளி மாணவர்களை ஊக்கவிக்கும்  வகையில் நவீன முறையில் படிப்பை தொடர 42 அங்குலம் கொண்ட ஸ்மார்ட் டிவி  பள்ளிக்கு வழங்கப்பட்டது.  இந்த நிகழ்வுக்கு உறுதுணையாக இருந்த அதனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. 



23.07.2019 அன்று விடியல் சமூக நல அறக்கட்டளை  வாழ்க்கை - 2 சார்பாக  மற்றும் ஜெய்வாபாய் மாநகராட்சி மேல்நிலை பள்ளி  நாட்டு நலப்பணி திட்ட 30 மாணவிகள்,  தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் சாந்தி ஆகியோர் முன்னிலையில் ஜெய்வாபாய் பள்ளி வளாகத்தில் மரக்கன்று மற்றும் பூச்செடிகள் நடப்பட்டது. பள்ளி மாணவிகள் மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பதாக உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதற்கு உறுதுணையாக இருந்த வாழ்கை - 2 தங்கவேலு, கண்ணன், சாரதி புவனா, கண்ணன்,  சரவணன் மற்றும் ரா.கார்த்தி, கணேஷ் (சாமுண்டி புரம்)  உங்கள் அனைவருக்கும் நன்றி.





15.07.2019 அன்று விடியல் சமூக நல அறக்கட்டளை  சார்பாக காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு அறிவொளி நகர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இதற்கு உதவிய  வாழ்க்கை -2 தங்கவேலு, கண்ணன்  (கோபால் காசிவிஸ்வநாதர் கோவில்)  சரவணன் மற்றும் பள்ளி தலைமையாசிரியர் மாணவ மாணவிகள் தங்கள் அனைவருக்கும்  நன்றி 


14.07.2019 அன்று விடியல் சமூக நல அறக்கட்டளை   மற்றும் தமிழ்நாடு மின்வாரிய பணியாளர் மற்றும் ஓய்வூதிய நண்பர்கள்  நற்பணி வட்டம். இணைந்து நடத்திய இலவசம் கண் அறுவை சிகிச்சை மற்றும் பொது மருத்துவ அறுவை சிகிச்சை  முகாம் நடத்தப்பட்டது.   இடம் தொரவலூர் சமூதாய நல கூடம் இதில் ரேவதி மருத்துவமனை மற்றும் லோட்டஸ் கண் மருத்துவமனை பங்கு பெற்றனர். 60க்கும்  மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.




01.07.2019 அன்று விடியல் சமூக நல அறக்கட்டளை சார்பாக விடியல் அறக்கட்டளை அலுவலகத்தில் மரக்கன்றுள் இலவசமாக மரக்கன்றுகள் கொடுத்துவருகிறோம். மரக்கன்றுகளை வீட்டில் நட்டு வளர்க்கப்படுவோம் என்று உறுதிமொழி மற்றும் நட்ட மரக்கன்றுகளை எங்கு நட்டார்கள் என்று வாட்சாப் மூலம் புகைப்படம் எடுத்து அனுப்புகிறேன் என்று வாக்குறுதியின் பெயரில் மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது.


24.06.2019 அன்று விடியல் சமூக நல அறக்கட்டளை சார்பாக திருப்பூர் கோல்டன் நகர் மாநகராட்சி பள்ளி அருகில் மரக்கன்றுகள் நடப்பட்டது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மரக்கன்றுகளை வளர்ப்பதாக உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர் - உதவிய நல்ல உள்ளங்களுக்கு மற்றும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் நன்றி.


20.06.2019 அன்று விடியல் சமூக நல அறக்கட்டளை  சார்பாக வாழ்கை -2 அமைப்பின் திரு. தங்கவேலு ஒத்துழைப்புடன் மரக்கன்றுகள் அறிவொளி நகர் ஆறுமுத்தம்பாளையம்  உயர் நிலை பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.



24.02.2019 அன்று விடியல் சமூக நல அறக்கட்டளை மற்றும் தேசிய முன்னாள் ராணுவ வீரர்கள் ஒருங்கிணைப்பு குழு இணைந்து திருப்பூர் சின்னச்சாமி அம்மாள் ஆண்கள் மேல்நிலை பள்ளி முன்பு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உயிர் தியாகம் செய்த நமது ராணுவ வீரர்களுக்கு மௌன அஞ்சலி மற்றும் மலர் அஞ்சலி செலுத்தியபோது.




04.01.2019 அன்று திரு ஆர். வசந்தா வயது (62) அவர்கள் இரண்டு கண்களை தானமாக பெற்று திருப்பூர் லோட்டஸ் கண் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. அவர்கள் கண்களை தானமாக பெற்று இருவருக்கு உலகை பார்க்க கண்களை தானமாக கொடுத்த அந்த ஆன்மா சாந்தியடையட்டும். (விடியல் சமூக நல அறக்கட்டளை)




தமிழ்நாடு டச் ரக்பி அசோஸியேஷன்
விடியல் சமூக நல அறக்கட்டளை
இணைந்து
அகில இந்திய அளவிலான டச் ரக்பி எனப்படும் தொடு பந்து தூக்கி செல்லும் விளையாட்டு போட்டிகள் 28,29,30.12.2018 ஆகிய தேதிகளில் மூன்று நாட்கள் வேலூர் மாவட்டம் , ஏலகிரியில், தொன்போஸ்கோ கல்லூரியில் வளாகத்தில் நடைபெற்றது . 15 க்கும் மேற்பட்ட மாநில விளையாட்டு அணிகள் பங்கேற்றது. இறுதி போட்டியில் ஆண்கள் அணியில் சட்டிஸ்கர் அணி முதல் பரிசை கைப்பற்றியது. இரண்டாம் இடத்தை தமிழக ஆண்கள் அணியும் பெண்கள் பிரிவில் டெல்லி அணி முதல்பரிசை பெற்றது. பெண்கள் பிரிவில் இரண்டாம் பரிசை சட்டிஸ்கர் அணி கைப்பற்றியது. பரிசுகளை பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் திரு.கே.சி.வீரமணி அவர்கள் வழங்கினார்.http://sports.dinamalar.com/viewvideoalbum.php?album=158838



02.10.2018 ஆம் தேதி காந்தி ஜெயந்தி விழாவை போற்றும் வகையில்
03.10.2018 அன்று விடியல் சமூக நல அறக்கட்டளை சார்பாக திருப்பூர் கோல்டன் நகர் மாநகராட்சி நடுநிலை பள்ளி அருகில் உள்ள இடத்தை சுத்தம் செய்து பள்ளியாசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் ஒத்துழைப்புடன் 50 மரக்கன்றுகள் நடப்பட்டது.


விடியல் சமூக நல அறக்கட்டளை சார்பாக 29.09.2018 சனிக்கிழமை அன்று நண்பர்கள்   உதவியுடன் திரு. ஜெயக்குமார் அவருடைய மகன் பிரபு தாஸ் (32 வயது) அவர்கள் காசநோயால் பாதிக்கப்பட்டு நுரையீரல் சுருங்கி மிகவும் பாதிப்பிற்குள்ளாகிவிட்டார். அவருக்கு 8 மாதகாலம் பிராணவாயு சிலிண்டர் தேவைப்படுகிறது. மற்றும் அதற்குண்டான உபகரணம் நண்பர்கள் உதவியுடன் வழங்கப்பட்டது.



விடியல் சமூக நல அறக்கட்டளை சார்பாக
13.09.2018 விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் விதமாக நண்பர் திரு.ப.பாரத் அவர்கள் தலைமையில் மற்றும் பாரத் நண்பர்கள் ஒத்துழைப்புடனும் 100 மரக்கன்றுகளை வாத்தியார் குளம் க மேட்டுத்தெரு அரியலூர் மாவட்டத்தில் நடப்பட்டது.



28.08.2018 விடியல் சமூக நல அறக்கட்டளை சார்பாக திருப்பூர் கோல்டன் நகர் அரசு நடுநிலை பள்ளியை சுற்றியுள்ள காலி இடங்களில் மரக்கன்றுகள் பள்ளி மாணவர்களால்  நடப்பட்டன. 




26.08.2018 விடியல் சமூக நல அறக்கட்டளை சார்பாக நிறுவனர் - நிர்வாக இயக்குனர் திருநாவுக்கரசு மற்றும் துணைவியார் தேவி ஆகியோரது 14 வது திருமணநாளை முன்னிட்டு புஞ்சை புளியப்பட்டியில் உள்ள மனித நலவாழ்வு அமைப்பு வளாகத்தில் 150 மரக்கன்றுகள் நடப்பட்டது. நட்ட மரங்களை பாதுகாக்கவும் அவர்கள் எங்களுக்கு உறுதிமொழி அளித்தனர்.




21.08.2018 அன்று விடியல் சமூக நல அறக்கட்டளை சார்பாக நிறுவனர் நிர்வாக இயக்குனர்  திருநாவுக்கரசு முன்னிலையில்   கேரளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு உதவும் வகையில் 3 லட்சம் மதிப்பிலான அரிசி, பனியன் ஆடைகள் , சமையல் பொருட்கள், தண்ணீர் பாட்டில், பிஸ்கட் , ரொட்டி ஆகியவைகள் பொருட்கள் திருச்சூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  வழங்கப்பட்டது.  பொருளுதவிக்கு உதவிய அணைத்து நல்லுள்ளங்களுக்கும்  மற்றும் இந்த பொருட்களை கொண்டு சேர்ப்பதற்கு உதவிய எனது நண்பர்களுக்கும்   நன்றி.




15.08.2018 அன்று 72 ஆம்  ஆண்டு சுதந்திர தின விழா   விடியல் சமூக நல அறக்கட்டளை சார்பாக திருப்பூர் பாப்பா நாயக்கன் பாளையம் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. 


17.03.2018 அன்று விடியல் சமூக நல அறக்கட்டளை சார்பாக 20 மரக்கன்றுகள் திருப்பூர், பெருமாநல்லூர், பொடாரம்பாளையம் பகுதிகளில் மரக்கன்றுகள்   எல்.ஆர். ஜி அரசு மகளிர் கலை கல்லூரியின் நாட்டுநலப்பணி திட்டம் மூலம் மாணவிகள் பெருமாநல்லூர் காவல் நிலையம், ஊராட்சி கிராம சேவை மையம் ஆகிய இடங்களில் பாதுகாப்பான முறையில்  மரக்கன்றுகள் நடப்பட்டது.



திருப்பூர் 07.02.2018 அன்று பிச்சம்பாளையம் ஸ்ரீ நகர் பகுதிகளில் மரக்கன்றுகள்  நடுவதற்காக  விடியல் சமூக நல அறக்கட்டளை அலுவலகத்தில் மரக்கன்றுகள் வழங்கியபோது. 



திருப்பூர் 31.01.2018 அன்று விடியல் சமூக நல அறக்கட்டளை சார்பாக கோகுல் கார்ப் நிறுவனத்தில் பாலியல் துன்புறுத்தல்  தடுப்பு விழிப்புணர்வு  நடத்தப்பட்டது.





திருப்பூர் 20.12.2017 அன்று விடியல் சமூக நல அறக்கட்டளை சார்பாக பல்லடம் ரோடு காம்யா பேப்ஸ் பின்னலாடை தயாரிப்பு நிறுவனத்தில் பெண்கள் மற்றும் ஆண் தொழிலாளர்களுக்கு தனித்தனியே பாலியல் வன்கொடுமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 





திருப்பூர் 08.12.2017 விடியல் சமூக நல அறக்கட்டளை சார்பாக அப்பாச்சி நகர் திரு.செல்வம் வீட்டின் முன் செல்வம் தம்பதியினரால் மரக்கன்றுகள் நடப்பட்டது.



திருப்பூர் 27.11.2017 விடியல் சமூக நல அறக்கட்டளை சார்பாக சாமுண்டி புரம் பால முருகன் நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் 53 மரக்கன்றுகள் நடப்பட்டது. மற்றும் வீட்டில் மரக்கன்று வளர்க்கும் பள்ளி மாணவ, மாணவியருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. வீட்டில் நட்ட மரக்கன்றுகள் நட்டு போட்டோ எடுத்து வாட்சப்பில் அனுப்பும்படியும் அறிவுரை வழங்கப்பட்டது.






17.11.2017 அன்று விடியல் சமூக நல அறக்கட்டடளை சார்பாக திருப்பூர் கொங்கு மெயின் ரோடு, இரயில்வே கேட்  அருகில் உள்ள வெங்கடாசலபதி மாநகராட்சி துவக்கப்பள்ளியில் 50 மாணவ மாணவியருக்கு இரத்தவை கண்டறிதல் முகாம் நடத்தப்பட்டது.



திருப்பூர்  29.09.2017 அன்று  திரு. ராஜகோபால் அவர்களின் கண்களை தானமாக பெற்று இருவருக்கு கண் ஒளி கிடைத்துள்ளது. மறைந்த திரு. ராஜகோபால்  அவர்கள் இன்னும் இறந்தும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். அவர்கள் ஆத்மா சாந்தி அடைய விடியல் சமூக நல அறக்கட்டளை சார்பாக பிரார்த்திக்கிறோம்.



திருப்பூர் 17.10.2017 அன்று விடியல் சமூக நல அறக்கட்டளை சார்பாக சிவசர்மிளா  குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் பாதுகாப்பு இல்லத்தில்   தீபாவளி பண்டிகை முன்னிட்டு  காலை உணவும், இனிப்பும்  மற்றும்  துணிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு உறுதுணையாக இருந்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.


விடியல் சமூக நல அறக்கட்டளை சார்பாக 12.10.2017 அன்று திருப்பூர் சாமுண்டி புரம் மாநகராட்சி அரசு பள்ளியில் 114 பள்ளி குழந்தைகளுக்கு இரத்தவகை கண்டறிதல் முகாம் நடத்தப்பட்டது.




திருப்பூர் - 07.10.2017 அன்று விடியல் சமூக நல அறக்கட்டளை சார்பாக  பல்லடம் ரோடு பெஸ்போக் பனியன் நிறுவனத்தில்  பாலியல் துன்புறுத்தல் தடுப்பு விழிப்புணர்வு  ஏற்படுத்தியபோது.




திருப்பூர் - 28.09.2017 அன்று விடியல் சமூக நல அறக்கட்டளை சார்பாக மாற்றுத்திறனாளிகள் பாலசுப்ரமணியம் மற்றும் மணி ஆகிய இருவருக்கு துணையுடன் நடப்பதற்கு   ஊன்று கோல் ( வாக்கிங் ஸ்டிக் ) இரண்டு பேருக்கு வழங்கப்பட்டது.


திருப்பூர் - 21.09.2017 அன்று விடியல் சமூக நல அறக்கட்டளை சார்பாக தங்கம்மன் பனியன் நிறுவனத்தில்  பாலியல் துன்புறுத்தல் தடுப்பு விழிப்புணர்வு  ஏற்படுத்தியபோது.





14.08.2017 அன்று  விடியல்  சமூக நல அறக்கட்டளை சார்பாக சுதந்திர  தினத்தை முன்னிட்டு திருப்பூர் குமார் நகர் பள்ளிக்கு 10 மரக்கன்றுகள்  பள்ளி வளாகத்தில்  நட்டு வளர்க்க  ஜெயமணி ஆசிரியை அவர்களிடம்  வழங்கப்பட்டது. 



விடியல் சமூக நல அறக்கட்டளை  சார்பாக 24.07.2017 .

 எனது தம்பிக்கு ஆண்  குழந்தை பிறந்த நினைவாக திருப்பூர் டி.பி.ஏ காலனி பகுதியில்  மரக்கன்றுகளை வைத்தபோது. 


திருப்பூர் 24.06.2017 அன்று விடியல் சமூக நல அறக்கட்டளை சார்பாக சின்னசாமி அம்மாள் மேல் நிலை பள்ளியில்  நடுவதற்காக 10 புங்கன் மரக்கன்று திரு.முத்துக்குமார் வாத்தியார் அவர்களிடம்  விடியல் அறக்கட்டளை  அலுவலகத்தில் வழங்கப்பட்டது.


13.06.2017 அன்று விடியல் சமூக நல அறக்கட்டளை சார்பாக உபகார சாமி மேல்நிலை  அரசாங்க பள்ளியில் படிக்கும் ஜெகநாதன் என்ற பள்ளி   மாணவருக்கு  பள்ளி சீருடை, நோட் மற்றும்  பள்ளி பேக் அறக்கட்டளை அலுவலகத்தில்  வழங்கப்பட்டது. 


திருப்பூர் 10.04.2017 அன்று விடியல் சமூக நல அறக்கட்டளை சார்பாக முதியவர்  குழந்தைவேல்   என்பவருக்கு உதவியுடன் நடக்க ஊன்றுகோல் வழங்கப்பட்டது. 


திருப்பூர் 10.04.2017 அன்று விடியல் சமூக நல அறக்கட்டளை சார்பாக அறக்கட்டளை அலுவலகத்தில்   கணபதி என்பவருக்கு காது கேட்க்கும் திறன் கருவி வழங்கியபோது.


திருப்பூர் 10.04.2017 அன்று விடியல் சமூக நல அறக்கட்டளை சார்பாக முதியவர் தான்  இறந்த பிறகு  எனது  உடலை மருத்துவத்துறைக்கு உடல்தான செய்வதாக பத்திரம் வழங்கினார்  . தொடர்ந்து விடியல் சமூக நல அறக்கட்டளை உடல்தான  விழிப்புணர்வை ஏற்படுத்தி அதன் மூலம் பெறப்படும். உத்திரவாத விண்ணப்பங்களை வாங்கி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு வழங்கி வருகிறது. இந்த பெரியவர் ஏழு யுககங்கள் ஆனாலும் வாழ்ந்துகொண்டு இருப்பார்.    


6.03.2017 அன்று விடியல் சமூக நல அறக்கட்டளை சார்பாக திருப்பூர் சின்னச்சாமி அம்மாள் பள்ளியில் வாரந்தோறும் திங்கட்கிழமை தினமலர் நாளிதழில் பட்டம் என்ற குறு இதழில் அறிவியல் சார்ந்த விஷயங்கள் மாணவர்களுக்கு பயன்தரும் வகையில் இருப்பதால் பள்ளி மாணவர்களுக்கு தினமலர் நாளிதழ் இலவசமாக துணை தலைமையாசிரியர் திரு பிச்சாண்டி அவர்களிடம் வழங்கப்பட்டது. மற்றும் இதேபோல் வாராவாரம் நாளிதழ் வழங்கப்படும்.



06.03.2017 திங்கட்கிழமை  காலை  விடியல் சமூக நல அறக்கட்டளை சார்பாக டெங்கு காய்ச்சல்  ஒழிப்பதற்காக திருப்பூர் அப்பாச்சி நகர்  மெஜஸ்டிக் கான்வென்டில் படிக்கும்  பள்ளி மாணவ  மாணவியருக்கு 400 பேருக்கு    நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. 


27.02.2017 அன்று விடியல் சமூக நல அறக்கட்டளை சார்பாக திருப்பூர் சின்னச்சாமி அம்மாள் பள்ளியில் வாரந்தோறும் திங்கட்கிழமை தினமலர் நாளிதழ் பட்டம் என்ற குறு இதழில் அறிவியல் சார்ந்த விஷயங்கள் மாணவர்களுக்கு பயன்தரும் வகையில் இருப்பதால் பள்ளி மாணவர்களுக்கு தினமலர் நாளிதழ் இலவசமாக, துணை தலைமையாசிரியர் திரு பிச்சாண்டி அவர்களிடம் வழங்கப்பட்டது. மற்றும் இதேபோல் வாராவாரம் நாளிதழ் வழங்கப்படும்.

20.02.2017 அன்று விடியல் சமூக நல அறக்கட்டளை சார்பாக திருப்பூர் சின்னச்சாமி அம்மாள் பள்ளியில் வாரந்தோறும் திங்கட்கிழமை தினமலர் நாளிதழ் பட்டம் என்ற குறு இதழில் அறிவியல் சார்ந்த விஷயங்கள் மாணவர்களுக்கு பயன்தரும் வகையில் இருப்பதால் பள்ளி மாணவர்களுக்கு தினமலர் நாளிதழ் இலவசமாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. மற்றும் இதேபோல் வாராவாரம் நாளிதழ் வழங்கப்படும்.



திருப்பூர் 01.02.2017 அன்று  பெண் தொழிளார்களுக்கான  பாலியல் தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி விடியல் சமூக நல அறக்கட்டளை சார்பாக  தங்கமன் எஸ்ப்போர்ட் நிறுவனத்தில் ஒருங்கிணைப்பாளர்  திரு பிரபாவதி பூபதி அவர்கள் தலைமையில்  நடத்தப்பட்டது.   







06.02.2017 அன்று  விடியல் சமூக நல அறக்கட்டளை சார்பாக  திருப்பூர் சின்னச்சாமி அம்மாள் பள்ளியில்  வாரந்தோறும் திங்கட்கிழமை தினமலர் நாளிதழ்   பட்டம் என்ற குறு இதழில் அறிவியல் சார்ந்த விஷயங்கள் மாணவர்களுக்கு பயன்தரும் வகையில் இருப்பதால் பள்ளி மாணவர்களுக்கு தினமலர் நாளிதழ் இலவசமாக வழங்கப்பட்டது. மற்றும் இதேபோல் வாராவாரம் நாளிதழ் வழங்கப்படும்.







திருப்பூர்  23.01.2017 அன்று  திரு ருக்மணி அம்மா அவர்களின் கண்களை தானமாக பெற்று இருவருக்கு கண் ஒளி கிடைத்துள்ளது. மறைந்த ருக்மணி அம்மாள் அவர்கள் இன்னும் இறந்தும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். அவர்கள் ஆத்மா சாந்தி அடைய விடியல் சமூக நல அறக்கட்டளை சார்பாக பிரார்த்திக்கிறோம்.



திருப்பூர் பிச்சம்பாளையம் ஸ்ரீ நகர் - வித்ய  விகாஸ் பள்ளி வளாகத்தில் 25.12.2016 தேதி இலவச கண்  அறுவை சிகிச்சை மற்றும் பொது  மருத்துவமுகாம் நடைபெற்றபோது. 



விடியல் சமூக நல அறக்கட்டளை சார்பாக 28.10.2016 வெள்ளிக்கிழமை அன்று கோயம்பத்தூர் கணுவாய் பகுதியில் ஆதரவுற்றோர் குழந்தைகள் காப்பகத்தில் அரிசி, பருப்பு , புது துணிகள் மற்றும் இனிப்புவகைகள் வழங்கப்பட்டது. குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடப்பட்டது.


விடியல் சமூக நல அறக்கட்டளை சார்பாக 03.09.2016 சனிக்கிழமை அன்று திருப்பூர் மெஜஸ்டிக் கான்வென்ட் பள்ளி வளாகத்தில் மாணவ மாணவியருக்கான இலவச பொது மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு சத்து மாத்திரை குடல் புழு நீக்கும் மாத்திரை வழங்கப்பட்டது.



திருப்பூர் 02.09.2016 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6.00 மணியளவில் விடியல் சமூக நல அறக்கட்டளை சார்பாக 11, 12 ஆம்  வகுப்பு  கைடு மற்றும் நோட்புக் அரசாங்க பள்ளியில் படிக்கும் தமிழ் செல்வி என்ற  மாணவிக்கு வழங்கப்பட்டது.



 70வது  சுதந்திர  தினத்தை முன்னிட்டு விடியல்  சமூக நல அறக்கட்டளை சார்பாக 12.08.2016 அன்று திருப்பூர்  குமார் நகர் மாநகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 50 மரக்கன்றுகள் நடப்பட்டது.  நட்ட மரக்கன்றுகளை மாணவ மாணவியர் பெயர் வைத்து வளர்க்கவேண்டும் என்று கேட்டு க்கொள்ளப்பட்டது.


திருப்பூர்  நகர் மண்டபத்தில் 31.07.2016  அன்று விடியல் சமூக நல அறக்கட்டளை மற்றும் அட்சரம் கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சார்பாக மருத்துவம் மற்றும் கல்வி நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ரூபாய் 1,10,000  சுமார் 20 க்கும் மேற்பட்டோர்கள் பயன் அடைந்தார்கள்.  


விடியல் சமூக நல அறக்கட்டளை சார்பாக திருப்பூர்  வடக்கு மகளிர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் திருமதி மோஹன சுந்தரி அவர்களின் தலைமையில் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் திரு.முருகேஷ் மற்றும் அசோக் குமார் ஆகியோர் குழந்தை மருத்துவச்  செலவுக்கு தாயிடம் ரூபாய் 5000 அறக்கட்டளை சார்பாக வழங்கியபோது. 


10.06.2016 துபாய் தனியார் நிறுவனம் திருப்பூரில் தொழிலாளர்கள்  பயன் பெறும் வகையில் எந்த தொழில் தொடங்கினாள் அதிகம் பயன் அடைவார்கள் என்று ஒரு சிறு விவாதம் 


05.06.2016 அன்று உலக சுற்றுபுறசூழல் தினத்தை முன்னிட்டு விடியல் சமூக நல அறக்கட்டளை சார்பாக திருப்பூர் டி.பி.ஏ காலனியில் 20 மரக்கன்று நடப்பட்டது.
On 05.06.2016 the dawn of World Environment Day, on behalf of the Vidial Social Welfare Trust Tirupur TPA Colony 20 sapling planted in the colony.


06.04.2016 தொழிலார்கள் பாலியல் தொந்தரவு  குறித்து விழிப்புணர்வு  நிகழ்ச்சி

Workers about sexual harassment awareness program


24.03.2016 சாய கழிவு நீர் சுற்றுப்புற சூழல் தொடர்பாக கலந்துரையாடல் ஸ்வீடன் மாணவர்களுடன் -

DYEING POLLUTION MEETING SWEDEN STUDENT 



விடியல் சமூக நல அறக்கட்டளை சார்பாக 03.03.2016 அன்று சிவஷர்மிலா அறக்கட்டளை ஆதரவுற்றோர் குழந்தைகளுக்கு உணவுபொருட்கள் வழங்கியபோது.
03.03.2016 Vidial Social Welfare Trust Donate  Grocery Things  Children's Home


16.02.2016 அன்று திருப்பூர் பனியன் கம்பெனியில் பாலியல் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடந்தபோது.
Tirupur Garments Meeting on 16.02.2016 in the Company during sexual awareness.


01.04.2012 NSS CAMP L.R.G COLLEGE TIRUPPUR VEERAPANDI 50 SAMPLING





07.11.2015 FLOOD RELIEF GOODS ISSUING IN CHENNAI

02.01.2010 ROAD SAFETY WEAK AWARNESS TOWN HALL TIRUPPUR

02.01.2013 ROAD SAFETY AWARNESS HEALMET CORPORATION NEAR


02.07.2011 N.R.K PURAM, SARKAR PERIYAPALAYAM NOTE BOOK ISSUE STUDENT 1500


03.01.2010 KIRUSHNA MOORTHI BUS ACCIDENT FUN DONATION


03.01.2011 L.R.G COLLEGE NSS CAMP TP AWARNESS RALLY

03.07.2012 LUNCH  TEST, BLOOD CAMP, EYE CHECKUP 95 PEOPLE TEST AT VENGATACHALPATHI SCHOOL SECOND IRAILWAY GATE



03.08.2012 PESIYOTHEARAFY  FOR HANDI CAMPPED 170 PEPOLE TESTED ANUPARPALAYAM ILANDHAI KATTU THOTTAM

03.12.2012 LUNCH TEST CAMP PEOPLE 60  AT TIRUPUR THIRUNEELA KANDA PURAM


04.07.2013 FREE EYE CAMP SUGAR CHECKUP, EYE CHECKUP TOTAL PEOPLE 250 TIRUPPUR COTTON MILL ROAD SAKTHI HOSPITAL

05.03.2013 kamarajar ninaivu nanaya angadi golden nagar school


05.10.2011 ROAD SAFETY AWARNES DRAMA  NSS CAMP PISHOP SCHOOL 15 VELAMPALAYAM


05.12.2013 EYE CAMP ORTHO CAMP VEERAPANDI PRIVU PEOPLE 200


5.08.2009 N.R.K. PURAM SECOND RAILWAY GATE HEAD LIGHT STICKER


07.12-2010 PAPER PACK ISSUE KONGU MAIN ROAD FISHER SHOP


08.03.2013 PACHAN PACHPAN CHILD LABOUR AWARNESS PROGRAMME SP OFFICE ANGERIPALAYAM

8.08.2011 ROAD SAFETY AWARNESS DRAMA AVINASHI BUS STAND


10.01.2016 EYE CAMP SIVA SHARMILA ASHRAM & GENERAL CAMP REVATHI MEDICAL 140 PERSON CHECKUP 8 PERSON SURGEON

10.06.2010 ENVIRONMENTAL SAMPLING 100 FOR CHINNASAMY AMMAL SCHOOL GROUND


10.09.2009 eye camp for student majastic convent appachi nagar


10.12.2010 TP AWARANESS PROGRAM TIRUPPUR KUMARAN SILAI



11.06.2009 FIVE FUNGTION MAJASTIC CONVENT - NOTE BOOK, FUND DONATOIN, COMPUTER CERTIFICATE, MARK SCORE MEDAL ISSUEING

11.07.2011 ROAD SAFETY AWARNESS HEAD LIGHT STICKER IN PAPPANAYAKAN PALAYAM SCHOOL STUDENT

11.08.2011 ROAD SAFETY AWARNESS DRAMA PERUMANALLUR BUS STOP


11.08.2011 UDUMALAI PETTAI ROAD SAFETY AWARNESS DRAMA


11.8.2010 AUGUST 15 INDIPENDAN DAY DRAWING COMPITATION CHINNASAMY AMMAL, N.R.K PURAM SCHOOL FOR STUDENT

12.08.2011 PICHAM PALAYAM EYE CAMP BALAVINAYAGAR KOVIL 200 PEOPLE EYE CHECKUP


13.01.2014 FREE EYE CAMP SIVA SHARMILA ASHRAM POONDI PERIYAAYI PALAYAM 120 OLD PEOPLE


14.05.2012 LUNCH TEST CAMP PEOPLE 100  AT TIRUPUR THIRUNEELA KANDA PURAM

15.04.2009 EYE CAMP NIRMALA RANI SCHOOL KATHIR NAGAR 150 PERSON EYE CHECKUP

15.04.2011 KANGEYAM ROAD SERAN NAGAR CORPORATION SCHOOL 100 SAMPLING ISSUE


15.08.2010 AUGUST INDIPENTAND DAY CELAPARATION EYE CAMP PLACE TIRUPUR TOWN HALL

15.11.2010 ENVIRONMENT EGG ISSUE KONGU MAIN ROAD SHOP


15.12.2012 EYE DONETION AWARNESS CAMP FOR STUDENTS CHINNASAMY AMMAL SCHOOL

16.05.2014 EYE CAMP, BALA ORTHO CAMP KOOLIPALAYAM SENBOL METRICULATION SCHOOL 70 PERSON CHECKUP


17.07.2013 MURUGANANDA PURAM MS NAGAR 300 SAMPLING ISSUE


17.10.2015 ABDUL KALAM BIRTHDAY SAMPLING ISSUE GOLDEN NAGAR SCHOOL, KUMAR NAGAR V.O.C SCHOOL SCHOOL, THIRU.VI.KA.SCHOOL SANTHIRAKAVI SCHOOL 84 SAMPLING ISSUE

17.12.2008 N.R.K PURAM SHCOOL SEER UDAI ( UNIFORM CLOTH ISSUE)

18.2.2009 DISPALITY RETAIRED PERSON SAMUNDI PURAM  MEDICL DONATION ISSUE


18.07.2010 CHINNASAMY AMMAL SCHOOL, N.R.K. PURAM SCHOOL MARK SCORED STUDENT ENGREGE MEDAL, CERTIFICATE

18.08.2012 ENVIRONMENTAL 100 SAMPLING ISSUE EATY VEERAMPALAYAM PERUMANALLUR

18.09.2009 GENERAL CAMP SAMUDNI PURAM PRIYA SCHOOL - PEOPLE


18.11.2012 BLOOD  GORUP FOUND FOR STUDENT N.R.K PURAM SCHOOL 119 STUDENT



19.07.2011 KAMARAJAR NANAYA ANGADI  PAPPANAYAGAN PALAYAM SCHOOL FOR STUDENT

19.09.2011 ROAD SAFETY DRAMA TIRUPPUR JAIVAI BAI SCHOOL


19.12.2011 N.R.K PURAM SCHOOL EYE , LUNGCH, GENERAL CAMP 300 PEPOLE


20.07.2011 ROAD SAFETY AWARNESS ACCIDENT DRAMA TIRUPUR, PUSHPA THEATER, PUTHIYA BUS STAND


20.08.2011 ROAD SAFETY AWARNESS DRAMA PALLADAM BUSTANT


20.08.2013 REBPULIC DAY EYE CAMP, PISOTHERAPY CENTER MS NAGAR MURUGANDHA PURAM STELLA MERYS SHOOL 325 PEOPLE

20.12.2010 EYE CAMP, GENERAL CAMP


22.03.2010 THANNEER PANDHAL SECOND IRAILWAY GATE FOR PEPOLE - ONE MONTH


23.08.2009 CHINNASAMY AMMAL STUDENT ACCIDENT FUND DONATION MURUGANANDAM


23.10.2010 KAPADI COMPITATION PLACE VAVIPALAYAM


23.10.2012 JOB TRAININ LADIES IN CHINNASAMY AMMAL SCHOOL COMPUTER, BUTIBALAR, EMPROIDING,


24.01.2012 L.R.G. COLLAGE NSS CAMP 100 SAMPLING ISSUE ANNA NAGAR PONGUPALAYAM


24.11.2012 FREE EYE CHECKUP FOR STUDENT GOLDEN NAGAR, PANDITH NAGAR CORPORATION SCHOOL 316 STUDENT


25.01.2010 EYE CAMP CHINNASAMY AMMAL STUDENT CHECKUP - STUDENT 1600


26.04.2010 N.R.K PURAM SHCOOL EYE CAMP & GENERAL CHECKUP


26.07.2009 ANGERI PALAYAM ROAD SAFETY AWARNESS HEAD LIGHT STICKER


27.01.2011 KUDIYARASU THINAVIZA GOVT HOSPITAL PISCUT ISSUE


27.02.2010 EYE CAMP SAMUNDI PURAM PRIYA SCHOOL PEOPLE 245


28.01.2010 REPPULIC DAY EYE CAMP S.V.COLONY RASATHI RACKIYANNAN MARRIEGE HALL FOR PEOPLE 350


29.01.2014 BODY DONATE 20 PERSON AWARNESS PROGROMME TIRUPPUR CHINNASAMY AMMAL SCHOOL REBPULIC DAY


30.12.2010 GOLDEN NAGAR SCHOOL EYE,GENERAL AND TEETH CAMP


30.12.2010 L.R.G COLLEGE NSS CAMP VEERAPANDI PRIVU  - 100 SAMPLING ISSUE



5 comments:

We are at the dawn of the 2008 Social Welfare Foundation on behalf of the welfare of children, the environment, youth development, women's empowerment, health camps, calaipatukappu, utaltana awareness, kantana awareness, blood donation camps, marrutiranalikal development. Please immediately communicated directly to blood collection. Subframe is our main tasks
 Tirupur without a profit motive might have been serving the community in the surrounding areas.
If someone is willing to help or contact a member. Our address kaen puturamakirsnapuram 19/37, 2nd Road, Tirupur - 641607. E-mail address